யோக்கியன் வேஷம் போடும் நிக்சன்… பிக் பாஸ் உள்ளே என்னென்ன செய்தார்.. புட்டு புட்டு வைத்த வினுஷா..

0
Follow on Google News

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் எபிசோடில் நடந்த ஒரு டாஸ்க்கில் போட்டியாளர்கள் பல்வேறு தருணங்களில் பேசிய வார்த்தைகள் டிவியில் காட்டப்பட்டது. அவற்றை பேசிய போட்டியாளர்கள் முன்வந்து அவர் அதனை எந்தச் சூழலில் என்ன காரணத்துக்காக பேசினார் என்பதை சக போட்டியாளர்களுக்கு விளக்க வேண்டும். அந்த வகையில், நிகழ்ச்சியின் தொடக்கத்தில் வினுஷாவின் உடல் அமைப்பு குறித்து நிக்சன் கூறிய சில வார்த்தைகள் டிவியில் காட்டப்பட்டன.

அதாவது நிக்சன், ‘வினுஷா வேலைக்காரி. ஒரு ஒருத்தங்களுக்கு ஏதாவது ஒன்னு அட்ராக்ட் ஆக வேண்டும். எனக்கு வந்து உடலழகு சரியாக இருக்க வேண்டும். வினுஷா தேவிக்கு மண்ட மட்டும் குட்டியா இருக்கு. அவங்க கண்ணு அழகா இருக்கு. ட்ரெஸ் போட்டா பெர்ஃபெக்டா இருக்கு. அது ஓகே. பூர்ணிமா அக்கா அழகா இருக்காங்க. அந்த மாதிர் பெர்ஃபெக்டா இருக்கணும்’ என ஐஷூவிடம் பேசி இருந்தார்.

அது குறித்து விளக்கமளிக்க வந்த நிக்சன், தான் அவ்வாறு பேசியது வினுஷாவுக்கே தெரியும் என்றும், தவறான நோக்கத்தில் தான் அப்படி சொல்லவில்லை என்றும் கூறினார். ஆரம்பத்தில் நிக்சன் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நல்லா பேசுறான் என அவனுக்கு ஃபயர் விட்டுக் கொண்டிருந்த ரசிகர்கள் தான் தற்போது நிக்சனை காஜி என்றும் வக்கிர புத்திக் கொண்டவன் என்றும் தடவல் மன்னன் என்றும் கழுவி ஊற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், நிக்சன் பேசியது தொடர்பாக விளக்கமளித்துள்ள நடிகை வினுஷா. முதல் வாரத்தில், எனக்கும் நிக்சனுக்கு இடையே ஒரு நல்ல புரிதல் இருந்தது. உண்மையாகவே நான் அவரை ஒரு தம்பியாக நினைத்தேன். அந்த வகையில்தான் நான் அவரிடம் பழகவும் செய்தேன். ஆரம்பத்தில் அவர் என்னை கிண்டல் செய்ய தொடங்கியபோது அதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என தெரிவித்த வினுஷா.

நாட்கள் செல்லச் செல்ல நிக்சன் எல்லையை கடக்கத் தொடங்கியதும், நான் நிக்சனிடம் அதனை நிறுத்துமாறு கூறினேன். காரணம், அவருடைய நடவடிக்கைகள் என்னை கஷ்டப்படுத்தியது. அவருடைய இந்த செயலுக்காக நான் அவரை நாமினேட் கூட செய்தேன் என தெரிவித்துள்ள வினுஷா. ஒருநாள் அவர் என்னிடம் மன்னிப்பு கேட்டார். ஆனால், அது என்னை கிண்டல் செய்ததற்காக மட்டுமே. அவரது இந்த பாடி ஷேமிங் கருத்துகளுக்காக அல்ல என்றும்.

மேலும் ஒரு விஷயம் தெளிவாக சொல்லிவிடுகிறேன். நான் பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்தபோது நிக்சன் என்னை பாடி ஷேமிங் செய்தது குறித்து என்னிடம் அவர் மன்னிப்பு கேட்கவோ அல்லது அதுகுறித்து பேசவோ செய்யவில்லை. என்னிடம் அவர் இதனை சொல்லிவிட்டதாகவும், எனக்கு இது அனைத்துமே தெரியும் என்று தவறாக தகவலை நிக்சன் சொல்கிறார். எனக்கு எதுவும் தெரியாது. பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய பிறகே இதுகுறித்து நான் தெரிந்து கொண்டேன் என தெரிவித்த வினுஷா.

மேலும் BULLY GANG-க்கு என்னுடைய பதில் என்னவென்றால், என்னை மட்டம் தட்டுவது, நிச்சயமாக வேடிக்கையோ விளையாட்டோ அல்ல. கடந்த வாரம் உரிமைக் குரல் எழுப்பிய பெண்ணியவாதிகள் இப்போது எங்கே? என சரமாரியாக கேள்வி எழுப்பிய வினுஷா. மேலும் இந்த வார இறுதியில் கமல் இந்த பிரச்சினை குறித்து பேசுவார் என்று நம்புகிறேன். இந்த பிரச்சினையில் எனக்காக பேசிய அனைவருக்கும் நன்றி” என்று வினுஷா தெரிவித்துள்ளார்,

இந்நிலையில் பிரதீப்பால் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறியதில் நிக்சனும் உண்டு. ஆனால் இப்போது அவரே ஒரு பெண்ணை பற்றி மோசமாக கமெண்ட் செய்து விட்டதாக ரசிகர்கள் எரிச்சல் அடைந்தனர். நிக்சனுக்கு இந்த சீஸனின் ஆரம்பத்தில் ரசிகர்களின் ஆதரவு இருந்து வந்தது. பிரதீப்பிற்கு அடுத்தபடியாக நிக்சனுக்கு தான் ரசிகர்கள் அதிகப்படியான வாக்குகளை வழங்கி வந்தார். ஆனால் நிக்சன் ஐஷுவிடம் சேர்ந்த பிறகு அவர் மீது விமர்சனங்கள் வர துவங்கின. மேலும் தவறான செயல்கள் நிக்சன் மீது ரசிகர்களுக்கு வெறுப்பு வர காரணமாக அமைந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.