பாத்ரூம்ல விஷ்ணு… முழுசா பார்த்த பெண் போட்டியாளர்… பிக் பாஸ் வீட்டில் கண்ணுக்கே தெரியாத கேமரா..

0
Follow on Google News

பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கி கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. கடந்த சீசன் விட அதிக சர்ச்சைகளும், தொடர் சண்டைகளும் கொண்ட ஒன்றாக இருந்து வருகிறது இந்த சீசன். மாயா மற்றும் பூர்ணிமா இருவரும் இணைந்து பிரதீப் ஆண்டனியை எப்படியாவது வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று காத்துக் கொண்டிருந்தனர்.

அதற்கு ஏற்றார் போல பிரதீப் மற்றும் கூல் சுரேஷ் இடையே மிகப் பெரிய பிரச்சனை ஏற்பட்டது. பிரதீப் கூல் சுரேஷின் அம்மாவை பற்றி தகாத முறையில் பேசியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. மேலும், பெண்களுக்கு வீட்டில் பாதுகாப்பு இல்லை என்றும் உரிமைக்குரல் எழுப்பினர்கள் சில பிக்பாஸ் போட்டியாளர்கள். மேலும், வீட்டில் பிரதீப் அடிக்கடி கேட்ட வார்த்தை பேசுவதாகவும் போட்டியாளர்கள் சிலர் பிரதீப்பிற்கு எதிராக கமல்ஹாசனிடம் முறையிட்டனர்.

பின்பு யாரும் எதிர்பார்க்காத வகையில் பிரதீப்பிற்கு ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றினார் கமல் இது ரசிகர்கள் மற்றும் பிரதீப் ஆதரவாளர்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பலரும் பிரதீப்பிற்கு ஆதரவாக தற்போது களமிறங்கியுள்ளனர், இந்நிலையில், பிக் பாஸ் பிரபலம் தாமரை இது குறித்து பேசியுள்ளார். அதில் அவர், “இந்த சீசனை நான் ஆரம்பத்தில் இருந்தே பார்த்து தான் வந்தேன். அப்போது எனக்கு பிரதீப்புடைய விளையாட்டு பிடித்திருந்தது.

ஆனாலும் அவர் ஒரு சில நேரங்களில் பேசும் வார்த்தை எனக்கு பிடிக்கவில்லை. பிக் பாஸ் வீட்டிற்குள் பிரதீப்பால் பாதுகாப்பு இல்லை என்று சொல்லி வெளியே அனுப்பி வைத்திருக்கிறார்கள். பிக் பாஸ் வீட்டிற்குள் எப்போதுமே எந்த பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை என்று சொல்லவே முடியாது. பிரதீப் பாத்ரூம் போகும்போது கதவை பூட்டிக்கொண்டு போகவில்லை என்று நிக்சன் குற்றச்சாட்டு வைத்திருந்தார்.

அது சரிதான் பிரதீப் அப்படி கதவை பூட்டிக் கொள்ளாமல் போனது தவறுதான். அங்கு பலபேர் இரவெல்லாம் கூட தூங்காமல் கண் விழித்தபடி பல கேமராக்களை வைத்து உள்ளே நடப்பதை பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள். நாங்கள் இருக்கும் சீசனில் கூட ஒரு நிகழ்வு நடந்தது. அதைப் பற்றி இப்போ வெளியே சொல்ல கூடாது. அப்படி ஒரு பிரச்சினை நடந்ததும் உடனே எங்களை வெளியே இருக்க சொல்லிவிட்டு, உள்ளே எல்லோரும் வந்து விட்டார்கள்.

அதனால் பிக் பாஸ் வீட்டிற்குள் எவ்வளவு பாதுகாப்பு இருக்கும் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு கண்ணாடிக்கு பின்னாலும் கேமரா இருக்கிறது. கண்ணுக்கு தெரிந்து 60 கேமராக்கள் என்றால் கண்ணுக்கு தெரியாமல் பல கேமராக்கள் இருக்கிறது. அது மட்டும் இன்றி ஒரு ஆளை கவனிப்பதற்காகவே ஒரு டீம் செயல்படுகிறது.

மேலும் பிரதீப்பை வெளியேற்றுவதற்கு முந்தைய நாள் இரவில் பெட்ரூமில் பூர்ணிமா குரூப்பில் உள்ளவர்கள் விஷ்ணு குளித்துக் கொண்டிருப்பதை நான் முழுசா பார்த்து விட்டேன் என்று சொல்லி சிரிச்சுக்கிட்டு இருந்தாங்க. இது மட்டும் சரியா? ஒரு ஆம்பள குளிச்சுகிட்டு இருக்கும்போது அவன் கதவை லாக் பண்ணாமையா குளிச்சிருப்பான்? அதை எதுக்கு இவங்க போய் எட்டிப் பார்க்கணும்?

இவங்க பண்ணுனா மட்டும் சரியா?” என்று காட்டமாக தாமரை பேசியுள்ளார். மீண்டும் பிரதீப் உள்ளே வருவது சாத்தியமா என்று தெரியவில்லை என்றாலும் பிரதீப் இடம் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நிர்வாகம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.