நிக்சன் அப்படி செய்வார் நினைக்கவே இல்லை… கண் கலங்கிய பெண் போட்டியாளர்.. பிக் பாஸ் வீட்டில் என்ன நடக்கிறது.?

0
Follow on Google News

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பத்தில் இருந்தே சண்டையும் சச்சரவுகளும் ஆக விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. நிகழ்ச்சி தொடங்கி 38 நாட்களை கடந்துள்ள நிலையில் பல்வேறு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும், மீதம் இருக்கும் போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் செய்யும் அட்டூழியங்கள் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே செல்கிறது.

குறிப்பாக ரேப் பாடகர் ஆன நிக்சன் தொடர்ந்து ரகளை செய்து வருகிறார். தினசரி புதுப்புது பிரச்சனைகளை உருவாக்கி வரும் நிக்ஸன், இப்போது அவரது வாயால் மற்றொரு பிரச்சனையில் சிக்கியுள்ளார். அதாவது நவம்பர் 8 ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு டாஸ் கொன்று கொடுக்கப்பட்டது. அதில் பிக் பாஸ் வீட்டிற்குள் உள்ள போட்டியாளர்கள் சொன்ன கமெண்ட்கள் காட்டப்படும்.

அந்த கமெண்ட்களை அவர்கள் ஏன் சொன்னார்கள் என்பதற்கான விளக்கத்தை அவர்கள் கொடுக்க வேண்டும். இதுதான் டாஸ்காக கொடுக்கப்பட்டது. அப்போது, “வினுஷா வேலைக்காரி.. அவ என்னோட டைப் இல்ல! ஒருத்தவங்களுக்கு ஏதாவது ஒன்னு அட்ராக்ட் ஆக வேண்டும்… என்னை பொருத்தவரை பெண்களுக்கு உடல் அழகு சரியா இருக்க வேண்டும் ..ஆனால் வினுஷாவுக்கு அப்படி இல்ல ..அவங்க கண்ணு நல்லா இருக்கு டிரஸ் போட்டா பெர்ஃபெக்ட்டா இருக்கு .. ஆனா மண்ட மட்டும் குட்டியா இருக்கு. பூர்ணிமா அக்கா அழகா இருக்காங்க அந்த மாதிரி பர்ஃபெக்ட்டா இருக்கணும் ” என்று டிவியில் கமெண்ட் ஒளிபரப்பப்பட்டது.

இந்த கமெண்ட் சில வாரங்களுக்கு முன்பு நிக்சன் ஐசுவிடம் தெரிவித்தது ஆகும். உடனடியாக இந்த கமெண்டுக்கு விளக்கம் அளிக்க எழுந்து நின்ற நிக்சன், நான் விளையாட்டாக தான் அப்படி பேசினேன், தப்பான அர்த்தத்தில் எதுவும் சொல்லவில்லை. இதற்காக வினிஷாவிடம் நான் மன்னிப்பும் கேட்டு விட்டேன் நம்புனா நம்புங்க இல்லைனா போங்க ..” என்று பதில் அளித்தார்.

ஒருவரை உருவ கேலி செய்வது என்பது மிகவும் மோசமான செயல்களில் ஒன்றாகும். அப்படி இருக்கையில், வினுஷாவை புண்படுத்தும் வகையில் இப்படி மோசமாக பேசியது மட்டுமில்லாமல், சற்றும் குற்ற உணர்ச்சி இல்லாமல் மலுப்பலாக பதில் அளித்த நிக்ஷனை உடனடியாக போட்டியை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று பலரும் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். இந்த சூழலில் வினுஷா, இந்த விவகாரம் குறித்து தனது instagram பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். இதனால் நிக்ஸனின் பொய்கள் அத்தனையும் வெளிச்சத்திற்கு வந்தன.

இந்த சர்ச்சை குறித்து வினுஷா தெரிவித்ததாவது, “பிக் பாஸ் வீட்டிற்குள் ஆரம்பத்தில் நிக்சன் என்னுடன் சகோதரனாக பழகி வந்தார் .. ஆனால் நாட்கள் செல்லச் செல்ல என்னை கேலி செய்ய தொடங்கினார் ..இது எனக்கு பிடிக்காததால் என்னை ட்ரோல் செய்வதை நிறுத்துமாறு அவரிடம் சொன்னேன்.. இவ்வாறு என்னை என் முன்னாடியே கேலி செய்வதற்காகவே அவர் என்னிடம் மன்னிப்பும் கேட்டார் .. ஆனால் என்னைப் பற்றி ஐசு விடம் உருவ கேலி செய்ததற்காக அவர் ஒரு நாளும் மன்னிப்பு கேட்கவில்லை .

அவர் என்னை உருவ கேலி செய்த விஷயம் என பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு தான் எனக்கு தெரியும் .. ஆனால் நிக்சன், இந்த விஷயம் எனக்கு தெரியும் என்று பொய்யான விளக்கத்தை கொடுத்துள்ளார்” என்று வினுஷா நடந்த உண்மையை போட்டு உடைத்துள்ளார் . நான் மிக்சனை ஒரு சகோதரனைப் போல் எண்ணினேன் ..ஆனால் இப்போது அவர் என்னைப் பற்றிய பேசிய கருத்துக்களை பார்க்கும்போது அவர் மீது வைத்திருந்த மரியாதையை உடைத்து விட்டேன். வார இறுதி எபிசோடில் கமல் சார் இந்த விவகாரம் பற்றி பேசுவார் என நம்புகிறேன் ..இந்த விவகாரத்தில் எனக்கு ஆதரவாக நிற்கும் மக்களுக்கு நான் நன்றி கூறுகிறேன் என்று இன்ஸ்டாகிராமில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.