போதை பொருள் விற்பனையில் பிரச்சனை… 19 வயது இளைஞன் வெட்டி படுகொலை.. சென்னையில் நடந்த துயரம்..

0
Follow on Google News

சென்னை : தமிழகத்தில் நாளுக்குநாள் குற்றச்செயல்கள் அதிகரித்துக்கொண்டே வருகிறது என்பதற்கு அடுத்தடுத்து நடைபெறும் கொலை மற்றும் கற்பழிப்புகள் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளன. அதிலும் தமிழக தலைநகரான சென்னையில் குற்றச்சம்பவங்கள் அதிகரித்துக்கொண்டே செல்வது அதிர்ச்சியளிப்பதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

சென்னை கொருக்குப்பேட்டை பகுதி ஹரிநாராயணபுரத்தை சேர்ந்த 19 வயதான ராகுல் என்பவன் சுற்றுப்புறங்களில் உள்ள போதை ஆசாமிகளுக்கு கஞ்சா மற்றும் போதை மாத்திரை போன்ற வஸ்துக்களை விற்றுவந்துள்ளான். இந்நிலையில் அவனிடம் மூன்றுபேர் போதை மாத்திரைக்காக ரூபாய் 24 ஆயிரம் கொடுத்ததாக தெரிகிறது.

ராகுல் அந்த மூன்று நபர்களிடம் போதை வஸ்த்தை கொடுக்காமல் அலைக்கழித்து வந்துள்ளான். மே 15 அன்று அவர்களிடம் பணத்தை பெற்ற ராகுல் கொல்லப்படும்வரை டிமிக்கி கொடுத்துள்ளான். பணத்தை கொடுத்த மூவரும் பணத்தையாவது திருப்பிக்கொடு என கேட்டிருக்கின்றனர். அதற்கும் பதில்சொல்லாமல் இருந்திருக்கிறான் ராகுல்.

இந்த நிலையில் கடந்த 21 மே இரவில் ராகுலை சந்தித்த ஏமாந்தவர்கள் பணத்தை திருப்பிக்கேட்க வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த வாய்த்தகராறு முற்றிய நிலையில் ஏமாந்தவர்களில் ஒருவன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக வெட்டிக்கொண்டே இருந்தான். ராகுல் ரத்த வெள்ளத்தில் சரிந்து விடாமல் நாற்பதுக்கும் மேற்பட்ட முறை வெட்டினான்.

அந்த வழியாக ஒரு நபர் கடந்து சென்றார். நடக்கும் படுகொலையை கண்டும்காணாமல் கடந்து அமைதியாக சென்றார். சராமரியாக வெட்டப்பட்டதில் ராகுல் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் சரிந்தான். அவனை ஸ்டாண்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு இரவு முழுவதும் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவன் ஞாயிறு காலை உயிரிழந்தான்.

இந்த படுகொலையில் தொடர்புடைய சங்கர்,சரவணன் மற்றும் ரகுமான் ஆகியோர் ஆர்.கே நகர் காவல்நிலையத்தில் சரணடைந்தனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.