சாமி.. மனசு சரியில்லை.. இளையராஜாவிடம் வேதனையை வெளிப்படுத்திய ரஜினி… என்ன நடந்து தெரியுமா.?

0
Follow on Google News

சமீபகாலம் நடிகர் ரஜினிகாந்த் பிரச்சனை மேல் பிரச்சனையை சந்தித்து வருகிறார். இரண்டாவது மகள் சௌந்தர்யா முதல் கணவரை விவாகரத்து செய்தது அதனால் ஏற்பட்ட பிரச்சனை. பின்பு அவருக்கு இரண்டாவது திருமணம் செய்து வைத்தார். கொரோனா காரணமாக தனது அரசியலை கைவிட்டது, அதனால் ஏற்பட்ட பிரச்சனை. மூத்த மகள் ஐஸ்வர்யா – தனுஷ் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதால் ஏற்பட்ட மனஉளைச்சல் எப்படி கடந்த சில வருடங்களாக பிரச்சனை மேல் பிரச்சனையை சந்தித்து வருகிறார் ரஜினிகாந்த்.

முன்பெல்லாம் ரஜினிகாந்த் மன நிம்மதிக்காக அடிக்கடி இமயமலை செல்வார், தற்பொழுது வயது முதிர்வு மற்றும் உடல் நிலை கருத்தில் கொண்டு அவர் இமயமலை செல்வதை தவிர்த்து வருகிறார். இந்த சூழலில் தன்னுடைய மன நிம்மதிக்காக இசைஞானி இளையராஜா ஸ்டூடியோவுக்கு அடிக்கடி செல்லும் ரஜினிகாந்த் அங்கே நடக்கும் இசை அமைப்புகளை பார்த்து ரசித்து வருகிறார். இது இளையராஜா – ரஜினிகாந்த் இடையே சமீப காலமாக நட்பின் நெருக்கம் அதிகரித்துள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்த பின்பு அவர் தெரிவிக்கும் ஒவ்வொரு அரசியல் கருத்துக்களும் பாஜகவுக்கு ஆதரவாக இருப்பதாக விமர்சனம் எழுந்தது. அதே போன்று சமீபத்தில் அம்பேத்கார் உடன் பிரதமர் மோடியை ஒப்பிட்டு இசைஞானி இளையராஜா கருத்து தெரிவித்து இருந்தது இளையராஜா பாஜகவின் ஆதரவாளர் என்கிற விமர்சனம் எழுந்தது. இப்படி ரஜினிகாந்த் மற்றும் இளையராஜா இருவரும் சித்தாந்தத்தில் ஒரே கோட்டில் பயணிப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டிற்கு சென்றுள்ளார் இளையராஜா. நீண்ட நேரம் இருவரும் மனம் விட்டு தங்கள் சோகங்கள், சந்தோசங்கள் அனைத்தையும் பகிர்ந்து கொண்டுள்ளார்கள். அப்போது ரஜினிகாந்த் புதிய படங்கள் குறித்து கேட்டுள்ளார் இளையராஜா, பதிலுக்கு இளையராஜா புதிய படங்கள் குறித்து கேட்ட ரஜினிகாந்த் ஸ்டுடியோவுக்கு வந்து ரெம்ப நாள் ஆச்சு அங்கே எப்ப என்ன வேலை நடக்கிறது என்று விசாரித்துள்ளார் ரஜினிகாந்த்.

வரும் ஜூன் 2ம் தேதி தன்னுடைய பிறந்தநாள் என்று சொன்ன இளையராஜா,அன்று கோவையில் தன்னுடைய இசை கச்சேரி நடைபெற இருக்கிறது, அந்த இசை கச்சேரிகளுக்காக ரிகர்சல் தன்னுடைய ஸ்டுடியோவில் நடந்து வருகிறது என்று தெரிவித்துள்ளார் இளையராஜா. உங்களை பார்த்த பின்பு நேர ஸ்டுடியோவுக்கு தான் செல்கிறேன் என்று இளையராஜா தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து மேலும் சில நிமிடம் நீடித்த இவர்களின் பேச்சு, பின்பு விடைபெறுவதாக இளையராஜா தெரித்துள்ளார்.

அப்போது… சாமி.. எனக்கு மனசு சரியில்லை உங்களுடன் உங்க ஸ்டாடியாவுக்கு வரலாமா.? என்று ரஜினிகாந்த் கேட்க.. அதற்கென வாங்க சேர்த்தே போகலாம் என்று இளையராஜா தெரிவித்துள்ளார். இதன் பின்பு இளையராஜா வந்த காரை அனுப்பிவிட்டு ரஜினிகாந்த் காரில் இருவரும் பேசிக்கொண்டே ஸ்டுடியோவுக்கு சென்றுள்ளனர், அங்கே நடந்த இசை நிகழ்ச்சிக்கான ரிகர்சல் பார்த்து மகிழ்ச்சியாக இருந்த ரஜினிகாந்த் சில பாடல்களுக்கு கை தட்டி பாராட்டும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

கீர்த்தி சுரேஷ் உடன் இரவில் அனிருத் அடித்த லூட்டி… வெளியானது பரபரப்பு..என்ன நடந்தது தெரியுமா.?