ஒருதலை காதல்.. சுற்றி வந்த வாலிபனை செருப்பால் அடித்த மாணவி மரணம்.. என்ன நடந்தது தெரியுமா.?

0
Follow on Google News

திருச்சி : தனியார் கல்லூரியில் படித்துவந்த மாணவி ஒருவருக்கு ரோமியோ ஒருவர் காதல்வலை வீசி காத்திருந்தார். அந்த வலையில் சிக்காத அந்த புள்ளிமான் தப்பியோடியுள்ளது. விடாமல் துரத்திய அந்த ரோமியோ செய்த செயல் தற்போது திருச்சியை கிடுகிடுக்க வைத்துள்ளது.

திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள கிராமமான நொச்சிபுதூர் பகுதியை சேர்ந்தவரா வித்யா லக்ஷ்மி. இவர் தனியார் கல்லூரியில் பிகாம் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். அவரை வாலிபர் ஒருவர் துரத்தி துரத்தி காதலித்துள்ளார். மாணவியை காதலிக்க சொல்லி வற்புறுத்தியுள்ளார்.

ஒருகட்டத்தில் பொங்கியெழுந்த வித்யா லக்ஷ்மி செருப்பைக்கொண்டு அந்த இளைஞரை அடித்துள்ளார். பலர் முன்னிலையில் அடிவாங்கியதால் அவமானப்பட்டதாக உணர்ந்த அவன் மறுநாள் தனது நண்பர்களுடன் கல்லூரிக்கு சென்ற வித்யாவை மடக்கி விஷம் கலந்த குளிர்பானத்தை குடிக்க சொல்லியதாக கூறப்படுகிறது. இதனால் சம்பவ இடத்திலேயே வித்யா மயங்கியுள்ளார்.

அதையடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த வித்யா உடல்நிலை மிக மோசமாகவே திருச்சி அரசு மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அங்கும் சிகிச்சையில் இருந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். அதைத்தொடர்ந்து மாணவியின் தாயார் சாந்தி திருச்சி பெல் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி நேற்று சடலத்தை வாங்கமறுத்து மாணவியின் உறவினர்கள் திருச்சி சந்திப்பு சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் சமாதானப்படுத்தியும் அவர்கள் மறுத்துள்ளனர். மேலும் அங்கு கூட்டம் கூடியதால் போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

திருச்சி மாணவியின் கொலை என கூறப்படும் இந்த விவகாரம் திருச்சி மற்றும் அதன்சுற்றுப்புற பகுதிகளில் பெரும் அதிர்ச்சியை உண்டுபண்ணியுள்ளது.