ஆணவத்தில் நன்றி மறந்த விஜய் சேதுபதி…. வாழ்கை கொடுத்தவர்க்கே இந்த நிலையா.? என்ன தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் விஜய் சேதுபதி சினிமா ஆசையில், சினிமா துறையில் கிடைக்கும் வேலைகளை செய்து, சினிமா வாய்ப்புகள் தேடி வந்தார். ஒரு கட்டத்தில் போதிய வருமானம் இல்லாமல், துபாய்க்கு வேலைக்கு புறப்பட்டு சென்றவர், அங்கே சில வருடங்கள் வேலை செய்த்தவர் மீண்டும் சினிமா ஆசையில் சென்னை திரும்பினார். கிடைக்கும் சிறு சிறு பாத்திரங்களில் நடித்து கொண்டே வாய்ப்புகள் தேடி வந்தார். ஒரு கட்டத்தில் வாய்ப்புகள் கிடைக்காமல், மீண்டும் துபாய்க்கு வேலைக்கு செல்ல ஏற்பாடு செய்தார்.

இந்த சூழலில் இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் தென் மேற்கு பருவக்காற்று படத்தில் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு விஜய் சேதுபதிக்கு கிடைத்தது. இந்த படம் மிக பெரிய ஹிட் கொடுத்து தேசிய விருதை பெற்று தந்தது. இதன் பின்பு அடுத்தடுத்து படங்களில் நடிக்கும் வாய்ப்புகளை பெற்று பிசியான நடிகராக வலம் வந்தார் விஜய்சேதுபதி. இடையில் மீண்டும் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த தர்மதுரை படம் அவரை அடுத்த கட்டத்துக்கு எடுத்து சென்றது.

கிடைக்கும் அணைத்து கதாபாத்திரத்திலும் நடிக்க தொடங்கிய விஜய் சேதுபதி, வில்லன் கதாபாத்திரத்திலும் ஜொலிக்க தொடங்கினார். விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்து வாங்கும் அதே சம்பளம் அவருக்கு வில்லனாக நடிக்கவும் கொடுக்கப்பட்டது. மேலும் விஜய் சேதுபதியின் வில்லன் பாத்திரம் பெருமளவில் பேசப்பட்டது. ஒரே நேரத்தில் பல படங்களில் ஒப்பந்தம் செய்த விஜய் சேதுபதி, வாங்கும் சம்பளத்தில் ஷாப்பிங் மால் ஒன்றையும் கட்டி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்பொழுது சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபத்தில் நடிப்பில் திரைக்கு வர தயராக இருக்கும் படம் மாமனிதன், இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்க சீனுராமசாமி கால் சீட் கேட்ட போது. தற்போதைக்கு என்னால் கால் சீட் கொடுக்க முடியாது என்று மறுத்த விஜய் சேதுபதி, வேறு ஒரு நடிகரை வைத்து எடுத்து கொள்ளுங்கள் என்று தனக்கு சினிமாவில் வாழ்க்கை கொடுத்த இயக்குனர் சீனுராமசாமி என்பதை மறந்து ஆணவத்தில் பதிலளித்துள்ளார் விஜய் சேதுபதி என்று கூறப்படுகிறது.

இது இயக்குனர் சீனு ராமசாமிக்கு மிக பெரிய மன உளைச்சலை கொடுத்ததாக கூறப்படுகிறது. சீனு ராமசாமி நிலைமை அறிந்த இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா நேரடியாக சென்று விஜய் சேதுபதியிடம் பேசியுள்ளார். அதற்கு விஜய் சேதுபதி நான் ரெம்ப பிசி என்கிற தோரணையில் பேசியுள்ளார். பின்பு இந்த படத்தில் நானும் எனது தந்தை இளையராஜாவும் இணைந்து இசை அமைப்பதாக தெரிவித்த யுவன் சங்கர் ராஜா.

நானும் எனது தந்தையும் இணைத்து இசையமைக்கும் முதல் படம் இது என யுவன் தெரிவிக்க. இதன் பின்பு தான் விஜய் சேதுபதி மாமனிதன் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.இருந்தும் தான் நடிகராக அறிமுகம் செய்த விஜய் சேதுபதி தன்னுடைய படத்தில் நடிக்க யுவன் சங்கர் ராஜா தனக்காக சிபாரிசு செய்து மீண்டும் கால் சீட் வாங்கியதை நினைத்து இயக்குனர் சீனு ராமசாமி வருத்தியதாக கூறப்படுகிறது.

கோபத்தில் அஜித் .. அஜித்தின் புதிய படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விரட்டியடிப்பு.! என்ன நடந்தது தெரியுமா.?