அக்காவின் கணவரால் தங்கை கர்ப்பம்…எனக்கு எதுவுமே தெரியாது என தங்கை திடுக்கிடும் தகவல்.. தேடுதல் வேட்டையில் போலீஸ்…

0
Follow on Google News

விருதுநகர் மாவட்டம் அருகில் உள்ள பெரியமருளுத்து கிராமத்தை சாத்திரக்காம்மாளுக்கு கெளரி, கஸ்தூரி, இலட்சுமி, மற்றொரு இலட்சுமி என்று 4 மகள்களும் 2மகன்களும் உள்ளனர். கெளரி, கஸ்தூரிக்கு, இலட்சுமிக்கு திருமணமாகிவிட்டது. ஆனால் கஸ்தூரியின் கணவன் இறந்து விட்டார். நான்காவது மகளான இலட்சுமிக்கு மட்டும் இன்னும் திருமணம் ஆகவில்லை தாயுடன் இருந்து வந்தார்.

கஸ்தூரியின் கணவர் இறந்ததால் அவர் தாய் மற்றும் திருமணமாகாத கடைசி தங்கைய இலட்சுமியுடன் சேர்ந்து வசித்து வந்தார். இந்த நிலையில் திருமணம் ஆகாத இலட்சுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. விருதுநகரில் உள்ள பெண் டாக்டரிடம் பரிசோதித்தபோது திருமணம் ஆகாத இலட்சுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த தாய் இலட்சுமியிடம் விசாரித்தபோது தனது அக்கா லட்சுமியின் கணவர் லட்சுமணன் தன்னிடம் அடிக்கடி எல்லை மீறியுள்ளார். அதனால் தான் கர்ப்பம் அடைந்ததாக திருமணமாகாத இலட்சுமி கூறினார். இந்த விஷயத்தை வெளியே சொன்னால் தன்னுடைய அக்கா இலட்சுமியை கொன்று விடுவதாக கூறி என்னிடம் பலமுறை எல்லை மீறியுள்ளார்.

அவர் என்னிடம் சில மாத்திரைகளை கொடுத்து சத்து மாத்திரைகள் என்று கூறி சாப்பிட சொன்னார், அதை உட்கொண்டதால் ரத்தப் போக்கு அதிகரித்து அரசு மருத்துவமனையில் இலட்சுமியை சேர்த்தனர். விருதுநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீஸார் லக்ஷ்மியை கர்ப்பமாக்கிய அக்காவின் கணவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.