மதுரையில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்த வாலிபர் கொலை..! வயலில் வீசப்பட்ட உடல்…

0
Follow on Google News

மதுரையில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த வாலிபர் ஒருவர் வயல்வெளியில் கொலை செய்யப்பட்டு கிடந்தை கண்டு போலீசுக்கு தகவல் கொடுத்தனர். மதுரை மாவட்டம் மகபூப் பாளையத்தைச் சேர்ந்த முகமது சையத் ஈசாக். இவர் மீது காவல் நிலையத்தில் திருட்டு மற்றும் மேலும் வழக்குகள் உள்ளன. இவர் மதுரை பழங்காநத்தம் பக்கத்தில் உள்ள வயல்வெளியில் அடித்துக் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார்.

இதுகுறித்து அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் எஸ் எஸ் காலனி காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் மோப்ப நாய்யை வரவழைத்து குற்றவாளியை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் மோப்ப நாய் சிறிது தூரம் சென்றதும் நின்று விட்டது. கொலை நடந்த இடத்தில் தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர்.

போலீசார் விசாரணைக்கு பிறகு அந்த வாலிபன் பல திருட்டு மற்றும் பல வழக்குகளில் சிக்கி உள்ளது தெரிய வந்தது. கொலையான வாலிபன் எப்போதுமே தனது கூட்டாளிகளுடன் நான் சுற்றி வருவானாம். இதனால் கூட்டாளிகளுடன் ஏற்பட்ட மோதலால் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் அல்லது வேறு எதுவும் முன் பகை காரணமாக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். கொலையாளிகளை பிடிப்பதில் போலீசார் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.