தமிழக் அரசின் கொரோனா இழப்பீட்டு தொகை… ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

0
Follow on Google News

கொரோனா தொற்றால் இறந்தவர்களுக்கு இழப்பீட்டு தொகையாக 50000 ரூபாய் வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்றால் கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகம் முழுவதும் கோடிக்கணக்கானவர்கள் இறந்துள்ளனர்.

இவ்வாறு இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கவேண்டும் என்று தொடர்ந்து குரல்கள் எழுப்பப்பட்டன. இதையடுத்து தமிழகத்தில் கொரோனா தொற்றால் இறந்தவர்களுக்கு உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் படி 50000 ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இந்த இழப்பீட்டுத் தொகையை ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து பெறும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. https://www.tn.gov.in/ என்ற தமிழக அரசின் தளத்தில் whats’s new என்ற பகுதியில் Ex Gratia for COVID 19 லின்க்கை சொடுக்கி கேட்கப்பட்டுள்ள தகவல்களை நிரப்பினால் வங்கிக் கணக்குக்கு இழப்பீட்டு தொகை வரும்படி வசதிகள் செய்யப்பட்டுள்ளன.