தலைமை காவலர் ஜெயக்குமார் மீது திமுக ஒன்றிய துணை செயலாளர் கொலைவெறி தாக்குதல்..

0
Follow on Google News

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே சீட்டு பணத்தை கேட்க சென்று காவலர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தி அடித்து துரத்திய திமுக ஒன்றிய துணை செயலாளர் ஜான்சன் உள்ளிட்ட 8பேர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர், தலைமை காவலர் ஜெயக்குமார் மீது மீது திமுக ஒன்றிய துணை செயலாளர் தாக்குதல் நடத்திய சம்பவம் அப்பகுதி மக்களிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் 46புதூர் பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார்.தலைமைகாவலரான இவர் மொடக்குறிச்சி காவல்நிலையத்தில் பணி பார்த்து வருகிறார்.இவரது மனைவி தீபிகா சிறு சேமிப்பு,ஏலச்சீட்டு நடத்தி வருகிறார்.இதில் நாமக்கல் மாவட்டம் கொக்கராயன்பேட்டை பகுதியை சேர்ந்த திமுக ஒன்றிய துணை செயலாளர் ஜான்சன் என்பவர் ஏலச்சீட்டில் கலந்து கொண்டு 1லட்சம் ரூபாய் சீட்டு எடுத்த நிலையில்.

மீதமுள்ள சீட்டு 30ஆயிரம் ரூபாய் தவனைத்தொகையை செலுத்தாமல் காலம்தாழ்த்தி வந்துள்ளார். இதையடுத்து தீபிகாவின் கணவர் காவலர் ஜெயகுமார் திமுக ஒன்றிய துணை செயலாளர் ஜான்சனிடம் சீட்டு பணத்தை கேட்டுள்ளார்.அப்போது இருவரிடையே வாக்குவாதம் முற்றி யது ஜான்சன் தனது ஆதரவாளர்கள் 8பேருடன் சேர்ந்து தலைமை காவலர் ஜெயக்குமார் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தி அவரை ஓட ஓட அடித்து துரத்தி உள்ளார்.

இதில் தலை .பகுதியில் பலத்த காயமடைந்து ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இதற்கிடையே காவலரை தாக்குதல் நடத்திய 8பேர் மீது பள்ளிபாளையம் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜான்சன் உறவினர் பீரவின்சன்,வைதீஸ்வரன் மற்றும் மேலாளர் சீராஜ்தீன் ஆகிய 3பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.,மேலும் தலைமறைவாக உள்ள திமுக நிர்வாகியை பள்ளிபாளையம் போலீசார் தேடி வருகின்றனர்..