அடுத்த ஐபிஎல் தொடரில் விளையாடுவேனா? தோனி அளித்த பதில்!

0
Follow on Google News

சென்னையில் இன்று நடந்த சி எஸ் கே அணிக்கான பாராட்டு விழாவில் தோனி கலந்துகொண்டார்.
ஐபிஎல் தொடரின் வலுவான அணிகளில் ஒன்றாக வலம் வந்து கொண்டிருக்கும் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இதுவரை நான்கு முறை அந்த அணி கோப்பையை வென்றுள்ளது.

கடந்த ஆண்டு மோசமாக லீக் போட்டிகளோடு வெளியேறிய அணி இந்த ஆண்டு பலமாக மீண்டு வந்து கோப்பையைத் தட்டிச் சென்றுள்ளது. ஐக்கிய அரபுகள் அமீரகத்தில் ஐபிஎல் தொடர் நடந்ததால் தமிழக ரசிகர்களால் வெற்றியை முழுமையாகக் கொண்டாட முடியவில்லை. இந்நிலையில் இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் தோனி உள்ளிட்ட வீரர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.

நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தோனியிடம் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடுவீர்களா என்ற கேள்வி எழுப்பியபோது ‘அதற்கு இன்னும் நிறைய காலம் உள்ளது. இப்போது நவம்பர் மாதம்தானே நடக்கிறது. ஐபிஎல் ஏப்ரல் மாதத்தில் நடக்க உள்ளது. அப்போது பார்த்துக் கொள்ளலாம்’ என மழுப்பலான பதிலைக் கூறியுள்ளார். இன்னும் சில மாதங்களில் ஐபிஎல் ஏலம் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.