இரண்டாவது இன்னிங்ஸில் சொதப்ப ஆரம்பிக்கும் இந்திய பேட்ஸ்மேன்கள்!

0
Follow on Google News

கான்பூர் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா 3 விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது. கான்பூரில் நடந்து இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இப்போது இறுதிகட்டத்தை நெருங்கி வருகிறது. நான்காம் நாள் ஆட்டத்தில் இன்று இந்திய பேட்ஸ்மேன்கள் சொதப்பி வருகின்றனர்.

முதல் இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடிய இந்தியா 345 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர் ஆடிய நியுசிலாந்து 296 ரன்கள் சேர்த்தது. இதனால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 49 ரன்கள் லீட் வைத்தது. இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் ஆடி வரும் இந்தியா மிக மோசமாக விளையாடி வருகிறது.

1 விக்கெட் இழப்போடு இன்றைய ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி அடுத்தடுத்து 2 விக்கெட்களை இழந்து இப்போது 41 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது. ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் மயங்க் அகர்வால் ஆகிய இருவரும் களத்தில் உள்ளனர்.