சர்ச்சையான முறையில் பந்துவீசிய அஸ்வின்… நடுவர் எச்சரிக்கை!

0
Follow on Google News

இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த பந்துவிச்சாளர் அஸ்வின் பல சர்ச்சைகளில் அவ்வப்போது சிக்கி வருகிறார். உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூர் மைதானத்தில் இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. போட்டியின் மூன்றாம் நாளான அஸ்வின் பந்துவீசியது குறித்து சர்ச்சைகள் எழுந்துள்ளன.

அஸ்வின் பந்துவீசும் போது அம்பயருக்கு பேட்ஸ்மேனை மறைக்கும் விதமாக கிரீஸின் நடுவில் நின்று வீசினார். அப்படி வீசக் கூடாது என நடுவர்கள் கூறியும் அவர் தொடர்ந்து அப்படியே வீசினார். அதனால் ஓவர் முடிந்ததும் நடுவர்கள் அஸ்வின் மற்றும் கேப்டன் ரஹானே ஆகிய இருவரையும் அழைத்து இது சம்மந்தமாக எச்சரித்து அனுப்பினர். அவர்களிடம் அஸ்வின் வாக்குவாதம் செய்தது இணையத்தில் வீடியோவாக வெளியாகி கவனத்தை ஈர்த்தது.