இந்திய ஒரு நாள் அணிக்கு இவர்தான் துணைக் கேப்டனாம்… விரைவில் அதிகாரப் பூர்வ அறிவிப்பு!

0
Follow on Google News

இந்திய அணிக்கு துணைக் கேப்டனாக கே எல் ராகுல் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. தென் ஆப்பிரிக்காவுக்கு செல்லும் கிரிக்கெட் அணியில் ஒரு நாள் தொடருக்கான கேப்டன் பொறுப்பு ரோஹித் ஷர்மா வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் ரசிகர்களுக்கு இது மிகப்பெரிய அதிர்ச்சியாக அமைந்தாலும், ஏற்கனவே இதற்கான அறிகுறிகள் தெரிந்தன.

மிகச்சிறந்த கேப்டன்களில் ஒருவராக செயல்பட்டு வரும் கோலி, ஐசிசி கோப்பைகளை வெல்லவில்லை என்பது ஒன்றே குறையாக சொல்லப்படுகிறது. அதனால் ஐபிஎல் கோப்பைகளை வென்ற ரோஹித் ஷர்மாவுக்கு கேப்டன் பதவி கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வந்தது. இந்நிலையில் கோலி தானாகவே பதவி விலகுவார் என 48 மணிநேரம் காத்திருந்ததாகவும்,

அவர் இறங்கி வராததால் நீக்கப்பட்டதாகவும் பிசிசிஐ வட்டாரத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ரோஹித் ஷர்மாவை கேப்டனாக அறிவித்து விட்டாலும் இன்னும் துணைக் கேப்டன் யார் என்பது அறிவிக்கப்படவில்லை. இதில் ரிஷப் பண்ட் மற்றும் கே எல் ராகுல் ஆகியவர்களின் பெயர்கள் பரிசீலனையில் இருந்தது. இப்போது கே எல் ராகுலுக்கே அந்த வாய்ப்பு செல்லும் என்று சொல்லப்படுகிறது. விரைவில் கே எல் ராகுலை துணைக் கேப்டனாக பிசிசிஐ அறிவிக்கும் என சொல்லப்படுகிறது.