மிடில் ஓவர்களில் அஸ்வின் செய்த மாயாஜாலம்… கேப்டன் புகழாரம்!

0
Follow on Google News

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு லிமிடெட் ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் ரி எண்ட்ரி கொடுத்துள்ளார் ரவிச்சந்திரன் அஸ்வின். டெஸ்ட் விளையாடும் பந்துவீச்சாளர்களில் இப்போது இருக்கும் சாதனையாளர்களில் ரவிச்சந்திரன் அஸ்வினும் ஒருவர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே அவர் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி வந்தார்.

ஒரு நாள் மற்றும் டி 20 கிரிக்கெட் போட்டிகளில் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இந்நிலையில் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அவர் டி 20 போட்டிகளில் தேர்வு செய்யப்பட்டு உலகக்கோப்பை தொடரில் களமிறங்கினார். தான் விளையாடிய எல்லா போட்டிகளிலும் விக்கெட் வீழ்த்தி அசத்தியுள்ளார். சமீபத்தில் நடந்த நியுசிலாந்து தொடரிலும் அவர் சிறப்பாக செயல்பட்டார்.

இந்நிலையில் இந்திய டி 20 அணியின் புதிய கேப்டன் ரோஹித் ஷர்மா அஸ்வின் குறித்து ‘நான்கு ஆண்டுகள் கழித்து வந்தாலும் அவரின் திறமைக் குறையவில்லை. சில போட்டிகளில் பவர்ப்ளேயில் நாம் ரன்களைக் கொடுத்தோம். ஆனால் மிடில் ஓவர்களில் ரன்கள் கட்டுப்படுத்தப்பட்டது. மிடில் ஓவர்களில் அஸ்வின் சிறப்பாக செயல்பட்டார்.’ என அவரைப் பாராட்டியுள்ளார்.