அய்யோ என் வாழ்க்கையே போச்சே… சானியா மிர்சாவை கழட்டி விடும் பாக்கிஸ்தான் காதல் கணவர்..

0
Follow on Google News

இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தன்னுடைய திறமையான விளையாட்டின் மூலம் இந்திய டென்னிஸ் நட்சத்திரமாக வலம் வந்தவர். மேலும் ஒரு காலத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாகவும் திகழ்ந்தவர் சானியா மிர்சா.ஏற்கனவே திருமணம் முடிந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சயிப் மாலிக் உடன் ஏற்பட்ட நெருக்கம் அதிகரித்ததை தொடர்ந்து இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்தது.

சானியா மிர்சாவை காதலிக்க தொடங்கிய அடுத்த சில மாதங்களில் முதல் மனைவி ஆயிஷாவை விவாகரத்து செய்து கொண்ட சயிப் மாலிக் உடனே 2010 ஆம் ஆண்டு சானியா மிர்சாவை திருமணம் செய்தார் சயிப் மாலிக், திருமணத்திற்கு பின்பு பாக்கிஸ்தானில் கணவர் சயிப் மாலிக் உடன் செட்டில் ஆனார் சானியா மிர்சா, இந்த தம்பதியினருக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

சயிப் மாலிக் மற்றும் சானியா மிர்சா இருவரும் துபாயில் தொழில் ரீதியாக பல நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதால். குடும்பத்துடன் துபாயில் செட்டிலாக தொடங்கினார்கள், அவ்வப்போது பாக்கிஸ்தான் சென்று வந்தனர். எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் சுமுகமாக சென்ற இவர்களின் இல்லற வாழ்க்கையில் பிரபல பாக்கிஸ்தான் நடிகை ஆயிஷா ஓமர் என்பவருடன் கடந்த 2021 ஆம் ஆண்டு போட்டோ சூட்டில் சயிப் மாலிக் நடித்தார்.

அப்போது இருந்தே சயீப் மாலிக் மற்றும் ஆயிஷா ஒமர் ஆகிய இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் இவர்களின் நெருக்கம் அதிகரிக்க தொடங்கியது. இருவரும் ஒன்றாக ஊர் சுற்றுவது, மேலும் வெளிநாடுகளில் பாகிஸ்தான் நடிகை ஆயிஷா ஒமருடன் கிரிக்கெட் வீரர் சயிப் மாலிக் ஒன்றாக சுற்றி வருவதாக பாக்கிஸ்தானில் வெளியாகும் ஊடகங்கள் கிசு கிசுக்களை வெளியிட்டனர்.

இதனை தொடர்ந்து சானியா மிர்சா – சயிப் மாலிக் இருவருக்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவகாரத்து செய்ய இருப்பதாக பாக்கிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டனர். இந்த விவகாரம் நடிகை ஆயிஷாவுக்கு மிக பெரிய அவப்பெயரை பாக்கிஸ்தான் மக்கள் மத்தியில் ஏற்பட்டதை தொடர்ந்து தன்னுடைய இமேஜை காப்பாற்றி கொள்ள சயீப் மாலிக்கை விட்டு நிரந்தரமாக விலகியுள்ளார் நடிகை ஆயிஷா ஒமர் என்று கூறப்படுகிறது.

மேலும் சானியா மிர்சா மற்றும் அவருடைய கணவர் மாலிக் இருவருக்கும் இடையில் விவகாரத்து ஆக போகின்றது என்கிற தகவல், இந்தியர்கள் மத்தியில் கடும் விமர்சனத்துக்கு உள்ளானார் சானியா மிர்சா, காரணம் கடந்த 2019 ஆம் ஆண்டு புல்வாமா பயங்கரவாத தாக்குதல் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து இந்தியாவில் பலரது எதிப்புக்கு உள்ளானார் சானியா மீர்சா.

குறிப்பாக புல்வாமா தாக்குதல் குறித்து தாம் பகிரங்கமாக கண்டனம் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று சானியா மிர்சா தெரிவித்திருந்தது பெரும் பிரச்சனையாக அப்போது உருவெடுத்தத. சானியா இந்த கருத்துக்கு பாகிஸ்தான் மக்கள் ஆதரவாகவும் பல இந்தியர்கள் எதிராகவும் சமூக வலைதளங்களில் சண்டையிட்டு கொண்டனர். அந்த வகையில் சானியாமிர்சா பாக்கிஸ்தான் கணவரை விட்டு பிரிந்து துபாயில் செட்டிலாக போகிறார் என்கிற தகவலால், பாகிஸ்தானை தலையில் தூக்கி வைத்து கொஞ்ச நஞ்ச ஆட்டமா ஆடுன என இந்தியர்கள் பலரும் விமர்சனம் செய்து வந்தனர்.

இந்நிலையில் சானியா மிர்சா – மாலிக் இடையில் பாக்கிஸ்த்தனை சேர்ந்த சில முக்கிய பிரமுகர்கள் சமரசம் பேசி தற்காலிகமா சேர்ந்து வந்திருந்த நிலையில் மீண்டும் கடந்த சில மாதங்களாக மீண்டும் பிரச்சனை ஏற்பட்டு கணவர் மாலிக்கை விட்டு தன்னுடைய குழந்தையுடன் சானியா தனியாக வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை, மாலிக் தனது இன்ஸ்டாகிராம் பயோவிலிருந்து மிர்சாவைப் பற்றிய குறிப்பை நீக்கியபோது, ​​அவர்களின் உறவின் நிலை மீண்டும் தீவிர விவாதத்திற்கு உட்பட்டது. அதே போன்று சானியா, தனது இன்ஸ்டாகிராம் கணக்கிலிருந்து மாலிக்கின் படங்களையும் நீக்கியுள்ளார். இந்நிலையில் சானியா – மாலிக் இருவரும் நிரந்தரமாக பிரிய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.