பணம் கொடுத்து ரஜினியை திட்ட விடுகிறாரா விஜய்.? ரஜினிக்கு எதிராக என்ன நடக்குது…

0
Follow on Google News

ஒரு பக்கம் விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் மோதிக்கொண்டிருக்க, மறுபக்கம் விஜய் மற்றும் ரஜினி ரசிகர்கள் மோதலில் ஈடுப்பட்டு வருகின்றனர். இதற்கெல்லாம் யார் அடுத்த சூப்பர்ஸ்டார் என்ற கேள்வி தான் முக்கிய காரணம். ரஜினியை பார்த்து ரஜினி ரசிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமான விஜய் இன்று உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வருகின்றார். இதைப்பார்த்த சிலர் விஜய் தான் தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர்ஸ்டார் என கருத்துக்களை தெரிவிக்க அது ரஜினி ரசிகர்களை சீண்டியது.

மேலும் வாரிசு பட விழாவில் சரத்குமார், விஜய் அடுத்த சூப்பர்ஸ்டார் என்ற அந்தஸ்தை அடைந்துவிட்டார் என கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விஜய் ரசிகர்களை பொறுத்தவரை சூப்பர்ஸ்டார் என்பது நிரந்தர பட்டம் கிடையாது. காலத்திற்கு ஏற்றாற்போல மாறிவரும் என்கின்றனர். ரஜினி ரசிகர்களை பொறுத்தவரை தமிழ் சினிமாவில் என்றும் ரஜினி தான் சூப்பர்ஸ்டார் என்கின்றனர். இது பெரும் மோதலாக வெடித்து வருகின்றது.

இதனைத் தொடர்ந்து, நடிகர் ரஜினி நடிக்கும் ஜெயிலர் படத்தில் பாடலாசிரியர் சூப்பர் சுப்பு வரிகளில் அனிருத் இசையமைத்து வெளியாகியுள்ள பாடல்தான், ‘ஹூக்கும்… டைகர்கா ஹூக்கும்…’ பாடல் வெளியான போது, அதில் இருந்த, ‘உன் அலும்ப பார்த்தவன்.. உங்க அப்பன் விசில கேட்டவன்… உன் மவனும், பேரனும் ஆட்டம் போட வைப்பவன் பேர தூக்க நாலு பேரு.. பட்டத்த பறிக்க நூறு பேரு.. குட்டி செவுத்த எட்டி பார்த்தா உசிரு கொடுக்க கோடி பேரு..’ என்ற வரிகள் விஜயை சீண்டும் வகையில் இருந்தது.

இந்தப் பாடல் வரிகள் விஜயை தாக்குவதற்காக ரஜினியின் விருப்பப்படியே இடம்பெற்றது என்று தகவல் வெளியானது. மேலும் விஜய் – ரஜினி ரசிகர்களுக்கு இடையில் நடக்கும் சண்டைக்கு இன்னும் கொஞ்சம் டீசல் ஊற்றும் விதமாக ரஜினியின் ஆடியோ லான்ச் உரை இருந்தது. ரஜினி கூறிய காக்கா-கழுகு கதை விஜய்-ரஜினி உவமையாக வைத்து அவர்கள் ரசிகர்கள் சண்டை போட்டனர்.

விழாவில் பேசிய ரஜினி, “காட்டில் சின்ன மிருகங்களெல்லாம் எப்பவும் பெரிய மிருகங்களை தொல்லை பண்ணிக்கிட்டே இருக்கும். இப்போ, உதாரணத்துக்கு காக்கா எப்பவும் கழுக சீண்டிக்கிட்டே இருக்கும். ஆனால், கழுகு எப்பவுமே அமைதியாக இருக்கும். பறக்கும் போது கழுகப் பார்த்து காக்கா உயரமாப் பறக்க நினைக்கும். இருந்தாலும் காக்காவால் முடியாது. ஆனால், கழுகு இறக்கையை கூட ஆட்டாம எட்ட முடியாத உயரத்தில் பறந்துக்கிட்டே இருக்கும்.” என்று பேசியிருந்தார்.

இந்நிலையில் மதுரையை சேர்ந்த தளபதி விஜய் ரசிகர்கள், “என்னுடைய உச்சம் உனக்கு ஏன் அச்சம்” என்று தளபதி விஜய், ரஜினி அவர்களை பார்த்து கூறுவதைப் போல ஒரு போஸ்டர் ஒன்றை வைத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து அந்த போஸ்டரை, ரஜினிகாந்தின் ரசிகர்கள் கிழித்து, அதற்கு பதிலடியாக போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

அதில் தட்டி பறிக்க தெரியாது. விட்டு கொடுக்க முடியாது… உலகின் நிரந்தர சூப்பர் ஸ்டார் என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் திரைத்துறை பிரபலங்கள் சிலர் ரஜினிகாந்த் உண்மையான சூப்பர் ஸ்டார் என்று கூறி வருகின்றனர். மேலும் விஜய் தனக்கென்று ஒரு குழுவை உருவாக்கி அவர்களுக்கு பணம் கொடுத்து சினிமாவில் ஒரு அரசியல் செய்து சூப்பர் ஸ்டார் பட்டத்தை பறிக்க நினைக்கிறார் என்கிற விமர்சனமும் எழுந்துள்ளது.

அது மட்டும் இல்லாமல் விஜய் தனது படம் ரிலீஸ் ஆகும் போது தனக்கென்று ஆட்களை செட் பண்ணி, தனது படம் பாக்ஸ் ஆபிஸில் இவ்வளவு கலெக்ஷன் வாங்கியது என்று கூற வைக்கிறார். அந்த வகையில் விஜய்யிடம் பணத்தை வாங்கிக்கொண்டு கடந்த சில நாட்களாக ரஜினியை கடுமையாக ப்ளூ சட்டை மாறன் போன்ற சினிமா விமர்சகர்கள் விமர்சனம் செய்து வருவதாகவும், இவர் எல்லாம் சூப்பர் ஸ்டார் ஆக முடியுமா.? என்று ரஜினிக்கு ஆதரவாக பலரும் கருத்துக்களை பகிர்ந்து வருவதை பார்க்க முடிகிறது.