திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கார்த்திகை தீப தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என வருடம் வருடம் முருக பக்தர்கள் முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், தொடர்ந்து அவர்களின் முயற்சி தோல்வியை தழுவி வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஆண்டு தீபத்தூணில் தீபம் ஏற்றக் கோரிய வழக்கில், மதுரை ஐகோர்ட் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டார்.
இருப்பினும், கார்த்திகை தீப திருநாளில் வழக்கம் போல் உச்சிப்பிள்ளையார் கோவில் வளாகத்தில் தான் தீபம் ஏற்றப்பட்டது. மலை உச்சியில் உள்ள கார்த்திகை தீப தூணில் தீபம் ஏற்றப்படவில்லை. ஐகோர்ட் உத்தரவிட்டும் தீபம் ஏற்ற அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தற்போது மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் விசாரணையில் உள்ளது.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாகத் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது, இந்த மேல்முறையீட்டு விசாரணையில் தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன், “மலை மீது இருப்பது தீபத்தூண் அல்ல; அது பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் நில அளவைக்காக நடப்பட்ட ஒரு சர்வே தூண் (Survey Pillar). சர்வே கல்லில் எப்படி தீபம் ஏற்ற முடியும்?” என்ற வாதத்தை முன்வைத்தார்.
இதற்கு நீதிபதிகள் சரமாரியாக கேள்விகளை எழுப்பி இருந்தனர், அதில் ‘திருப்பரங்குன்றம் மலை மீது இருப்பது சர்வே தூண் தான் என்பதை நீங்கள் அறிவியல் பூர்வமாக உறுதி செய்துள்ளீர்களா? அது சர்வே கல் என்பதற்கான வரலாற்று அல்லது ஆவண ரீதியான ஆதாரங்கள் உங்களிடம் உள்ளனவா? அதை உறுதிப்படுத்த அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? தமிழக அரசு தரப்பிடம் சரமாரியாக கேள்வி எழுப்பிய நீதிபதிகள்.
மேலும், மதுரையைச் சுற்றியுள்ள ஆனைமலை, நாகமலை போன்ற மற்ற மலைகளில் இது போன்ற உயரமான சர்வே தூண்கள் இல்லையே, இந்த மலையில் மட்டும் ஏன் இவ்வளவு உயரமாக அமைக்கப்பட்டுள்ளது?’ என தமிழக அரசுக்கு எதிராக சரமாரி கேள்விகளை நீதிபதி எழுப்பிய போது அதற்கு பதில் சொல்ல முடியாமல் திணறி நின்றனர் அரசு தரப்பு வழங்கறிஞர்கள்.
மேலும் இந்து அமைப்பு தரப்பில் மத்திய தொல்லியல் துறை (ASI) வெளியிட்ட கல்வெட்டு ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. அந்த கல்வெட்டு அறிக்கையின்படி, நாயக்க மன்னர்கள் காலத்திலேயே அது ஒரு தீபத்தூண் என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, “இந்தத் தூணில் தீபம் ஏற்றுபவர்கள் புண்ணியவான்கள்” என்று கல்மேல் எழுத்தாகப் பொறிக்கப்பட்டுள்ள ஆதாரங்களை இந்த அமைப்பு தரப்பில் சுட்டிக்காட்டினர்.
இந்நிலையில் தற்பொழுது நீதிமன்றத்தில் நடந்து வரும் திருப்பரங்குன்றம் மலை விவகாரம் குறித்து மேல்முறையீடு விசாரணையில் திமுக அரசுக்கு மிக பெரிய பின்னடைவை ஏற்படுத்தி கொடுத்து இருக்கிறது. ஏற்கனவே, சி.ஐ.எஸ்.எப். வீரர்கள் பாதுகாப்புடன் தீபம் ஏற்றப்பட்டதை “அதிகார மீறல்” என்று அரசு கூறியபோது, நீதிமன்றம் அதை ஏற்க மறுத்துவிட்டது. தற்போது “சர்வே தூண்” என்ற அரசின் வாதத்திற்கும் நீதிமன்றம் கடும் கேள்விகளை எழுப்பியுள்ளதால், இந்த வழக்கின் தீர்ப்பு திமுக அரசுக்கு மிக பெரிய பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் இப்படியே இந்த வழக்கு தொடர்ந்தால், திமுக அரசுக்கு எதிராகவும், முருக பக்தர்களுக்கு ஆதரவாகவும் தீர்ப்பு வந்து, மலை உச்சியில் உள்ள கார்த்திகை தீப தூணில் தீபம் ஏற்றப்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

