இத்தாலியில் பிறந்த சோனியா காந்தி, 1968-ல் ராஜீவ் காந்தியை திருமணம் செய்தார். அதிகாரப்பூர்வமாக இந்திய குடியுரிமை பெற்றது 1983-ம் ஆண்டு ஏப்ரல் 30-ம் தேதி தான். ஆனால் 1980-ல் நடந்த டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் ‘Sonia Gandhi’ என்ற பெயர் இடம் பெற்றிருந்ததாக புகார் எழுந்தது.அப்போதே தேர்தல் ஆணையம் இதை கண்டுபிடித்து 1982-ல் பெயரை நீக்கியது.
ஆனால் ‘குடியுரிமை இல்லாத போது வாக்காளர் பட்டியலில் பெயர் எப்படி வந்தது?’ என்ற கேள்வி இப்போது வரை மர்மமாகவே இருந்து வந்தது. டெல்லியைச் சேர்ந்த விகாஸ் திரிபாதி என்பவர் இதே கேள்வியை எழுப்பி, 2023-ல் டெல்லி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ‘இது தேர்தல் மோசடி, போலி ஆவணம் தயாரித்தல், அரசு ஆவணங்களை தவறாக பயன்படுத்தல் உள்ளிட்ட குற்றங்கள்’ என்று சோனியா மீது FIR போடக் கோரினார்.

செப்டம்பர் 2024-ல் நீதிபதி வைபவ் சவுரஷியா இந்த மனுவை தள்ளுபடி செய்து, ‘ஏற்கனவே தேர்தல் ஆணையம் பெயரை நீக்கிவிட்டது, போதுமான ஆதாரம் இல்லை’ என்று கூறி வழக்கை முடித்துவிட்டார்.
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி நீதிமன்றத்தில் குற்றவியல் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை சிறப்பு நீதிபதி விஷால் கோக்னே அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ‘‘இந்திய குடியுரிமை பெறுவதற்கு முன்பாகவே வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க போலி ஆவணங்களை கொடுத்து மோசடி செய்ததாக சோனியா காந்தி மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
அவர் மீது குற்றவியல் வழக்குப் பதிவு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றவியல் சீராய்வு மனுவுக்கு சோனியா காந்தி மற்றும் டெல்லி காவல் துறை பதிலளிக்க கோரி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது நீதிமன்றம்.
இந்நிலையில் கடத்த சில மாதங்களுக்கு முன்பு பாஜகவின் ஐ.டி. பிரிவு தேசிய தலைவர் தலைவர் அமித் மால்வியா,சோனியா காந்தி இந்திய வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றது, தேர்தல் சட்டத்தை வெளிப்படையா மீறிய செயல் என கடுமையா சாடியிருக்கார் அமித் மால்வியா.. மேலும் சோனியா காந்தியின் பெயர் உண்மையான குடியுரிமைக்கான தேவையை பூர்த்தி செய்யாமல் வாக்காளர் பட்டியலில் இரண்டு முறை பதிவு செய்யப்பட்டது,
முதலில் 1980 இல் இத்தாலிய குடிமகனாகவும், பின்னர் 1983 ஆம் ஆண்டில் அவர் சட்டப்பூர்வமாக இந்திய குடிமகனாக மாறுவதற்கு சில மாதங்களுக்கு முன்பும் சேர்க்கப்பட்டது’ என அவர் மேலும் கூறினார். ராஜீவ் காந்தியை மணந்த பிறகு இந்திய குடியுரிமையை ஏற்க 15 ஆண்டுகள் ஆனது ஏன் என்ற கேள்வியையும் மால்வியா எழுப்பி இருந்தார்.
இந்த நிலையில் சோனியா காந்தி குடியுரிமை குறித்த விவகாரம் தொடர்பாக திரிபாதி தரப்பு தில்லி நீதிமன்றத்தில் குற்றவியல் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இது சிறப்பு நீதிபதி விஷால் கோக்னே அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது திரிபாதியின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், “சில ஆவணங்கள் போலியாக உருவாக்கப்பட்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். இதனால் உடனடியாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு பதிலாக இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்” என்று வாதிட்டார்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ‘‘இந்திய குடியுரிமை பெறுவதற்கு முன்பாகவே வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க போலி ஆவணங்களைக் கொடுத்து மோசடி செய்ததாக சோனியா காந்தி மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அவர் மீது குற்றவியல் வழக்குப் பதிவு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றவியல் சீராய்வு மனுவுக்கு சோனியா காந்தி மற்றும் தில்லி காவல் துறை பதிலளிக்க வேண்டும்” என்று கூறி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது மிக பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

