செருப்பு மாலை போட்டவர்க்கு செருப்படி பதிலடி…. தரமான சம்பவம் செய்த அண்ணாமலை..!

0
Follow on Google News

சமீபத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து விமர்சனம் செய்திருந்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரிக்கு பதிலளித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது, கே எஸ் அழகிரி அவர்கள் நாளை காங்கிரஸ் போராட்டம் என்று அழைத்தால் ஒரு பத்து பேர் வருவார்கள். கோவையில் காங்கிரஸ் சார்பில் ஏர்கலப்பை போராட்டம் என்று ஒன்று நடத்தினார்கள்,

அதன் பின்பு சமீபத்தில் காங்கிரஸில் இணைந்த ஒரு ஐஏஎஸ் அதிகாரி ஏர்கலப்பை போராட்டம் ஒரு நாடகம் என அவர் குறிப்பிடுகிறார். ஒரு பல் இல்லாத பாம்பாக காங்கிரஸ் கட்சியில் கே எஸ் அழகிரி இருக்கின்றார். அவர் கட்சியில் அவரின் இடது புறம் இருப்பவர் அடுத்த பாரத பிரதமரா முகஸ்டாலின் வரவேண்டும் என கூறுகிறார் . வலதுபுறம் இருப்பவர் இந்தியாவின் விடிவெள்ளி மு க ஸ்டாலின் என சொல்கிறார்,

மற்றொருவர் முதல்வர் முக ஸ்டாலினுக்கு கடிதம் எழுதுகிறார் உங்கள் மகனை உடனே அமைச்சர் ஆக்குங்கள் என்று. அவர்கள் மீது கூட நடவடிக்கை எடுக்க முடியாமல், கட்சிக்குள்ளேயே இருந்து தன்னை பழித்துப் பேசுபவர்களை கூட வைத்துக்கொண்டு ஒரு பல் இல்லாத பாம்பாக கே எஸ் அழகிரி இருக்கின்றார். அதனால் அவருடைய புகழ் பல்லாண்டு வாழ்க என பத்திரிக்கை நண்பர்கள் மூலமாக சொல்லிக் கொள்கிறேன் என அண்ணாமலை தெரிவித்திருந்தார்.

இதற்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒருவர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை புகைப்படத்துக்கு செருப்பு மாலை அணிவித்து மிக கடுமையாக விமர்சனம் செய்தவர், இறுதியில் ஜெய் காங்கிரஸ், ஜெய் கே.எஸ் அழகிரி என கோஷமிட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார், இந்த விடியோவுக்கு பாஜக மத்தியில் எதிர்ப்பு இருந்து வந்தாலும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அந்த வீடியோ வெளியிட்ட நபருக்கு தரமான பதிலடி கொடுத்துள்ளார்.

அண்ணாமலை அந்த வீடியோவை மேற்கோள் காட்டி, தனது டிவீட்டர் பக்கத்தில், அண்ணா வணக்கம், செருப்பினால் மாலை அணிவித்து கௌரவம் தந்துள்ளீர்கள். செருப்பு புற அசுத்தங்களிலிருந்து நம்மை பாதுகாப்பது. நான் தற்போது சபரிமலைக்கு மாலையணிந்து விரதம் ஏற்றுள்ளேன். செருப்பு அணிவதில்லை. தாங்களும் தங்கள் அன்பான குடும்பமும் நலமுடன் வாழ சபரிமலை சாஸ்தாவை வேண்டுகிறேன் என அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். இந்த பதில் தான் தரமான செருப்படி பதில் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடதக்கது.