நாராயணா… உன்னை வீடு புகுந்து வெட்டுவோம்..! விசிக நிர்வாகி கொலை மிரட்டல்..நடவடிக்கை எடுக்குமா தமிழக காவல் துறை..

0
Follow on Google News

‘காங்கிரஸ் இல்லாத பாஜக இல்லாத ஒரு அணியை உருவாக்கலாம் என்று ஒரு சிலர் முயற்சிக்கிறார்கள். தயவு செய்து அப்படிப்பட்ட முயற்ச்சிக்கு திமுக துணை போய்விடக்கூடாது. காங்கிரஸ் இல்லாத ஒரு அணியை கட்டினால் அது பாஜகவுக்கு சாதகமாக முடியும்’ என விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துருந்தார்.

இதற்கு பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தனது டிவீட்டர் பக்கத்தில், தொல்.திருமாவளவன் அவர்களின், இந்த பேச்சிலிருந்து மூன்று விஷயங்கள் தெளிவாகிறது. 1. காங்கிரஸ் – திமுக உறவில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது. 2. திரு. தொல் திருமாவளவனுக்கு பாஜகவின் வளர்ச்சியை கண்டு அச்சம் அதிகமாகியுள்ளது.

  1. பாஜக வளர்வதை தடுக்க, ஒன்றரை லட்சம் ‘தமிழர்களை’ கொன்று குவிக்க துணை நின்ற காங்கிரஸ் கட்சியின் கூட்டணியே முக்கியம், அதாவது தமிழினத்தை விட ‘அரசியல் அதிகாரம் மற்றும் ஆதிக்கமே’ முக்கியம் என்ற நிலைப்பாட்டில் திருமாவளவன் உள்ளார். தமிழா! தமிழா! இதுவல்லவோ தமிழின துரோகம் என நாராயணன் திருப்பதி பதிவு செய்திருந்தார்.

இதற்கு விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த ஒருவர், அட சங்கி நாராயணா விடுதலை சிறுத்தை கட்சி நினைத்தால் பாஜக தமிழ்நாட்டில் நடமாட முடியாது, உன் வீட்ல வந்து உன் வாயிலே வெட்டுவோம், ஆனால் எங்க தலைவர் எங்களை அப்படி செய்ய விடமாட்டர், அதனால நீ அவருக்கு தான் நன்றி சொல்ல வேண்டும், இல்ல இது தான் நீ போட்ட கடைசி டிவீட்டர் பதிவாக இருக்கும் என, வீடு புகுந்து வெட்டுவோம் என பகிரகமாக கொலை மிரட்டல் விடுத்துள்ளார் விசிக கட்சியை சேர்ந்த கருணாகரண் என்பவர்.

இந்நிலையில், பாஜகவை சேர்ந்தவர்கள் சமூக வலைதளத்தில் அவதூறு பதிவு செய்ததற்காக நள்ளிரவில் தமிழக காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்து வரும் நிலையில், விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த தில்லை கருணாகரன் என்பவர், பகிரங்கமாக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதற்கு தமிழக காவல் துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்குமா.? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

திருமாவளவனுக்கு சுய அறிவு இல்லையா.?
வெளுத்து வாங்கிய திருமாறன் ஜி