மூக்கை பிடித்து கொண்டு கொசு கடியில் தவிக்கும் PTR தியாகராஜனின் தொகுதி மக்கள்.! தற்பெருமை பேசும் அமெரிக்க புகழ் PTR தியாகராஜன் எங்கே.?

0
Follow on Google News

மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகின்றவர் PTR பழனிவேல் தியாகராஜன், தென் மாவட்டத்தில் மிக சிறிய தொகுதியான மதுரை மத்திய தொகுதி தான் மதுரை மீனட்சி அம்மன் கோவில் இருக்கிறது, ஆகையால் இந்த தொகுதி அதிகம் சுற்றுலா பயணிகள் வரும் தொகுதியாகும், இந்த தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக உள்ள PTR தியாகராஜன் அலட்சியத்தால் தொகுதி முழுவதும் பல இடங்களில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொகுதி மக்கள் நாற்றம் தாங்க முடியாமல் மூக்கை மூடிக்கொண்டு கொசு கடியில் வசித்து வரும் அவலம் அரங்கேறியுள்ளது.

தென் மாவட்டத்தின் முக்கிய பகுதியான மதுரை மத்திய தொகுதியில் பல இடங்களில் சாலைகள் பராமரிக்கப்படாமல் குண்டும் குழியுமாக இருக்கிறது, குறிப்பாக மதுரை மத்திய தொகுதி மேலமாசிவீதி முகமதியர் தெரு வார்டு எண் 83 உள்ள பகுதிகள் கழிவு நீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ள புகைப்படம் ஆதாரத்துடன் அப்பகுதி மக்கள் வெளியிட்டு அமெரிக்காவில் இருந்து வந்து தற்பெருமை பேசும் எங்கள் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் PTR தியாகராஜன் லட்சணத்தை பாருங்கள் என தெரிவித்து வருகின்றனர்.

மதுரை மத்திய தொகுதி முழுவதும் அடிப்படை வசதி இல்லாமல் அந்த பகுதி மக்கள் சிரமத்தில் உள்ளதை அறிந்து, தொடர்ந்து மத்திய, மாநில அரசுகளை குற்றம் சுமத்தி PTR தியாகராஜன் தப்பித்து வருவதை அந்த தொகுதி மக்கள் வன்மையாக கண்டித்து வருகின்றனர், மத்திய, மாநில அரசுகளை குற்றம் சுமத்தி தப்பித்து கொள்ளும் PTR தியாகராஜன் எதற்கு எங்கள் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார், ஒட்டு கேட்டு வரட்டும் தக்க பதிலடி கொடுக்கிறோம் என மதுரை மத்திய தொகுதி மக்கள் கடும் கோவத்தில் இருந்து வருகின்றனர்.

மதுரை மத்திய தொகுதியில் உள்ள சிம்மக்கல் பகுதியில் பெரும் பண செலவில் மறைந்த திமுக முன்னால் தலைவர் கருணாநிதிக்கு சிலை அமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வரும் PTR தியாகராஜன், அவருக்கு வாக்களித்த தொகுதி மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதில் கவனம் செலுத்தினால் மதுரை மத்திய தொகுதி மக்கள் சுகாதார்த்தத்துடன் இருக்க முடியும் என்றும், மேலும் தொகுதி பக்கம் வந்தால் தானே தொகுதியில் இருக்கும் மக்கள் குறைகள் தெரியும் என்று மதுரை மத்திய தொகுதி மக்கள் வருத்தத்துடன் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இது குறித்து விசாரித்ததில், மதுரை மத்திய தொகுதியில் சிறுபான்மையினர் வாக்குகள் அதிகமாக இருப்பதால், அவர்கள் ஓட்டுகள் முழுவதும் திமுகவுக்கு தான் விழும் ஆகையால் தான் எளிதாக வெற்றி பெற்று விடுவேன் என்கிற திமிரில் தான் தொகுதி மக்களை PTR தியாகராஜன் கண்டு கொள்வதில்லை என அந்த தொகுதியை சேர்ந்த மற்ற கட்சியினர் கருத்து தெரிவித்து வருகின்றனர், ஆனால் இம்முறை முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் மதுரை மத்திய தொகுதியில் முஸ்லீம் வேட்பாளர் ஒருவரை தான் நிறுத்த வேண்டும் என அந்த தொகுதியில் உள்ள இஸ்லாமிய மக்கள் மத்தியில் குரல் ஒலிக்க தொடங்கியுள்ளது குறிப்படத்தக்கது.