அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாகிவிட்டது என் வாழ்கை.! நெருங்கிய தோழிகளிடம் புலம்பி தவிக்கும் திரிஷா.!

0
Follow on Google News

தமிழ் சினிமாவில் உச்ச நடிகையாக வலம் வந்தவர் திரிஷா, தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு சினிமாவிலும் நல்ல மார்க்கெட் த்ரிஷாவுக்கு இருந்தது.சினிமா உச்சத்தில் இருந்த போதே கடந்த 2015ஆம் ஆண்டு திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து தொழிலதிபர் வருண் மணியனை திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்து அதற்கான திருமண நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்தது, இதில் இருவரும் மோதிரம் மாற்றி கொண்டனர்.

வருண்மணியனை திருமணம் செய்ய முடிவு எடுப்பதற்க்கு முன்பு வரை தெலுங்கு நடிகர் ராணாவை காதலித்து வந்தார் திரிஷா, இந்த காதல் ஜோடி ஒன்றாக உலகம் முழுவதும் சுற்றி வந்தது, இந்த ஜோடி திருமணம் செய்து கொள்ள இருப்பதாக அப்போது செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக இந்த காதல் ஜோடி பிரிந்ததது, இதன் பின் காதல் தோல்விக்கு பின் சிறிது காலம் தனியாக இருந்தார்.

இதன் பின் சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு திருமண வாழ்க்கையை தொடங்க முடிவு செய்த திரிஷா தொழிலதிபர் வருண்மணியனை காதலித்து திருமணம் செய்ய முடிவு செய்து இருவருக்கும் திருமண நிச்சயம் 2015ஆம் ஆண்டு ஜனவரி 23-ந்தேதி சென்னையில் நடைபெற்றது.த்ரிஷாவுக்கும், வருண்மணியனுக்கும் 2015 ஆம் ஆண்டு இறுதிக்குள் திருமணம் நடைபெறுவதாக இருந்தது.ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இவர்களின் திருமணம் ரத்து செய்யப்பட்டது.

இதற்கு காரணம் த்ரிஷா வாழ்க்கையில் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்த தெலுங்கு பட நடிகர் ராணா தான் என கூறப்பட்டது, கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த ராணா மீண்டும் திரிஷா நிச்சயதார்த்தம் முடிந்தது திரிஷாவுடன் சமரசம் செய்துள்ளார், இந்நிலையில் ராணா தன்னை திருமணம் செய்துகொள்வார் என நம்பி வருண்மணி உடன் நடந்த திருமண நிச்சயதார்த்தை ரத்து செய்துவிட்டு மீண்டும் தெலுங்கு நடிகர் ராணா உடன் ஜோடியாக நட்சத்திர நிகழ்ச்சியில் காட்சி அளித்தார் திரிஷா.

ஆனால் மீண்டும் ராணா-திரிஷா ஜோடி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தது, இந்நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு நடிகர் ராணா, மிஹீகா பஜாஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார், இந்நிலையில் திரைதுறையினர் அனைவரும் ராணா திருமணத்துக்கு வாழ்த்து தெரிவித்த நிலையில், அவரின் முன்னாள் காதலி திரிஷா அவருக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை. இதற்கிடையே சமூக வலைத்தளத்தில், ‘முன்னாள் காதலியை நெருங்கிய நண்பர்களாக வைத்திருப்பவர்கள் நார்சிஸ்ஸிஸ்டிக் சைக்கோபாத்ஸ்’ என திரிஷா பதிவிட்டு தனது கோவத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் இது குறித்து தனது நெருங்கிய நண்பர்களிடம் த்ரிஷா பேசுகையில், வருண்மணி நல்ல மனிதர், ராணா தன்னை உண்மையாக காதலிப்பதாக நம்பி வருண்மணியனை திருமணம் செய்ய மறுத்து விட்டேன் என தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது, இதை கேட்ட திரிஷாவின் நெருங்கிய தோழிகள் அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாகிவிட்டது திரிஷா வாழ்கை என வருத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.