Dr கிருஷ்ணசாமியையும், எடப்பாடியையும், அரசியலில் இருந்து விரட்டாமல் ஓய மாட்டேன்…. தீவிரமாக களத்தில் இறங்கிய சௌத்ரி தேவர்..

0
Follow on Google News

பிரபல தயாரிப்பாளர் சௌத்ரி தேவர், தொடர்ந்து அவர் சார்ந்த முக்குலத்தோர் சமூகத்தின் மக்களுக்காக குரல் கொடுத்து வருகிறவர், அந்த வகையில் தன்னுடைய சமூகத்தினருக்கு எதிராக யார் விமர்சனம் செய்தாலும் அவர்களுக்கு எதிராக தக்க பதிலடி கொடுத்து வரக்கூடிய சௌத்ரி தேவர்,

அந்த வகையில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமியை அரசியல் ரீதியாக எதிர்த்து கருத்து தெரிவித்து வருகின்றவர், அதே சினிமா துறையில் இயக்குனர் பா.ரஞ்சித் மற்றும் மாரிசெல்வராஜ் போன்றார் கருத்துக்களுக்கு தொடர்ந்து எதிர் கருத்து தெரிவித்து பதிலடி கொடுத்து வரக்கூடியவர் தயாரிப்பாளர் சௌத்ரி தேவர்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தென் மாவட்டங்களில் நடந்த சில குற்ற சம்பவங்களை குறிப்பிட்டு, இந்த குற்ற செயலில் தொடர்ந்து ஈடுபடுவது குறிப்பிட்ட சமூகத்தினர் தான் என முக்குலத்தோர் சமூகத்தில் உள்ள மறவர் சமூகத்தினரை குறிப்பிட்டு புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி மிக கடுமையாக பேசியது, யாரோ ஒருவர் செய்யும் குற்றச்செயலுக்கு ஒட்டு மொத்தமாக ஒரு குறிப்பிட்ட சமூகத்தை எப்படி குற்றம் சொல்லலாம் என மிக பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது டாக்டர் கிருஷ்ணசாமியின் பேச்சு.

மேலும் டாக்டர் கிருஷ்ணசாமி மகன் ஷியாம் கிருஷ்னசாமி, அவருடைய சமூக வலைதள பக்கத்தில் சில குற்றச்சம்பவங்களை குறிப்பிட்டு, எல்லாம் மறவர் சாதி வெறியர்கள். திருத்திக்கொள்ளுங்கள், திருப்பி அடிக்க ரொம்ப நேரம் ஆகாது. என பதிவு செய்திருந்தார். இதற்கு அப்போதே மிக கடுமையான தன்னுடைய கண்டனங்களை பதிவு செய்திருந்த சௌத்ரி தேவர்.

தொடர்ந்து தான் சார்ந்த ஒரு சமூகத்தை சீண்டி கலவரத்தை தூண்டும் வகையில் பேசி வரும் புதிய தமிழகம் கட்சி தலைவர் Dr கிருஷ்ணசாமியை எதிர்த்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் பிரச்சாரம் செய்வோம் என அப்போதே எச்சரிக்கை விடுத்த சௌத்ரி தேவர். மேலும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் புதிய தமிழகம் கட்சியை யார் கூட்டணியில் சேர்த்தாலும் அந்த கூட்டணி கட்சியை எதிர்த்து தமிழகம் முழுவதும் தான் சார்ந்து முக்குலத்தோர் சமூகத்தினர் மத்தியில் பிரச்சாரம் செய்து Dr கிருஷ்ணசாமி இடம்பெறும் கூட்டணிக்கு வாக்களிக்க கூடாது என பிரச்சாரம் செய்வேன் என கடந்த சில மாதங்களுக்கு மும்பு எச்சரிக்கை விடுத்து இருந்தார் சௌத்ரி தேவர்.

இந்த நிலையில் தற்பொழுது எடப்பாடி பழனிச்சாமி அணியுடன் Dr கிருஷ்ணசாமி கூட்டணி வைத்துள்ள நிலையில், ஏற்கனவே தான் சொன்னது போன்று தற்பொழுது Dr கிருஷ்ணசாமி இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி கூட்டணிக்கு எதிராக முக்குலத்தோர் சமூகத்தினர் மத்தியில் தன்னுடைய பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார் சௌத்ரி தேவர். மேலும் திமுகவின் ஆதரவாளர் சௌத்ரி தேவர் என அரசியல் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில், இந்த நாடளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் Dr கிருஷ்ணசாமி ஆகியோருக்கு எதிராக சௌத்ரி தேவரை பிரச்சாரத்தில் ஈடுபட வைப்பதின் பின்னனியில் திமுக இருக்கிறது என்றும் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தென் மாவட்டங்களில் பெரும்பான்மையாக இருக்க கூடிய முக்குலத்தோர் சமூக மக்கள் ஏற்கனவே எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக இருந்து வரும் நிலையில் தற்பொழுது எடப்பாடி பழனிசாமி உடன் Dr கிருஷ்ணசாமி கூட்டணி அமைத்துள்ளது, மேலும் எடப்பாடி கூட்டணிக்கு எதிராக முக்குலத்தோர் சமூகத்தினர் மத்தியில் சௌத்ரி தேவர் பிரச்சாரம் செய்து வருவது முக்குலத்தோர் சமூக வாக்குகள் எடப்பாடி பழனிச்சாமி கூட்டணிக்கு எதிராக திமுக கூட்டணிக்கு ஆதரவாக அமையும் என்கிறது தேர்தல் கள நிலவரம்.