வரும் தேர்தலில் வெற்றி பெற்று டெல்லி செங்கோட்டைக்கு ஸ்டாலின் சொல்கிறாரா.?திமுக கூட்டத்தில் உளறல்.!

0
Follow on Google News

திமுக தலைவர் ஸ்டாலின் உளறுவது போன்று, அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் உளறியது கூட்டத்தில் சிரிப்பலையை ஏற்படுத்தியது, முக ஸ்டாலின் மேடைகளில் துண்டு சீட்டை பார்த்து பேசும்போது, மாணவி அனிதாவுக்கு பதில் சரிதா என்றும்,அவர் ஜப்பானில் துணை முதல்வராக இருந்ததாகவும், மேலும் துண்டு சீட்டை பார்த்து குடியரசு தினம், சுதந்திர தினம் தேதியை கூட தவறாக பேசி உளறி வருகின்றவர் முக ஸ்டாலின்,

இந்நிலையில், தருமபுாி மாவட்டம் தடங்கம் பகுதியில் இரு திணைகளுக்கு முன் திமுக தலைவா் ஸ்டாலின் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டாா். மதியம் ஒரு மணிக்கு நடக்க வேண்டிய இந்நிகழ்ச்சி மாலை 4 மணிக்குத் தான் தொடங்கியது.இதனால் கூட்டத்திற்கு அழைத்து வரப்பட்ட பொதுமக்கள் சாப்பிடுவதற்கு உணவு எதுவும் வழங்கப்படாததால் பட்டினி காரணமாக சோர்வுடன் காணப்பட்டனர்.

இக்கூட்டத்தில் தருமபுாி தொகுதி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினரும், தருமபுாி கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளருமான தங்கம் பெ.சுப்பிரமணி வரவேற்று பேசினார். அவர் பேசுகையில், தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளிலும் திமுக சட்டமன்ற உறுப்பினா்களாக வெற்றி பெற்று தலைவா் ஸ்டாலினை செங்கோட்டைக்கு அனுப்புவோம் என்று உளறினார். கோட்டைக்கும், செங்கோட்டைக்கும் வித்தியாசம் தெரியாமல் தி.மு.க. எம்.எல்.ஏ. தொண்டர்கள் முன்னிலையில் உளறியதை கேட்டு அரங்கத்தில் சிரிப்பலை எழுந்தது.

மேலும் ஸ்டாலின் பேசுகையில், 7 பேரை பேச வைப்பதாக சொல்லி இதுவரை 15 பேர் பேசியுள்ளீர்கள் என கூறியதால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. தொடர்ந்து பேசிக்கொண்டு இருக்கும்போதே பொது மக்கள் வெளியேறியதால் ஸ்டாலின் தன் உரையை முடித்துக் கொண்டாா்.ஸ்டாலின் சென்றவுடன் நுழைவுவாயிலில் வைத்திருந்த வாழைத்தார்களை திமுகவினர் ஒருவருக்கு ஒருவா் முந்தியடித்து பிடுங்கி எடுத்து சென்றனா். மேலும் இது போன்ற செய்திகளை உங்கள் வாட்ஸாப் செயலில் பெற 8925154074 என்ற எண்ணிற்கு “ACT NEWS” என்று மெசேஜ் செய்யவும் .