கோவையை மொத்தமாக கொள்ளையடிக்க வேலுமணிக்கு பழனிசாமி குத்தகைக்கு விட்டுள்ளாரா? முக ஸ்டாலின் கடும் தாக்கு.!

0
Follow on Google News

கோவையை மொத்தமாக கொள்ளையடிக்க வேலுமணிக்கு பழனிசாமி குத்தகைக்கு விட்டுள்ளாரா? என கோவையில் நடந்த நிகழ்ச்சியில் திமுக தலைவர் முக ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார், மேலும் அவர் பேசுகையில், பாலம் கட்டினால் மட்டும் தான் துட்டு அடிக்க முடியும் என்பதால், தேவையில்லாத இடத்தில் எல்லாம் பாலம் கட்டத் தொடங்கி இருக்கிறார்கள் பழனிசாமியும் வேலுமணியும். சேலத்திலும் கோவையிலும் பழனிசாமியும் வேலுமணியும் கட்டி இருப்பது மக்கள் பயன்பாட்டுக்கான பாலங்கள் அல்ல, ஊழல் பாலங்கள்.

அரசாங்கத்தை விமர்சித்தால் கைது செய்வேன், நடவடிக்கை எடுப்பேன், மிரட்டுவேன், பொய் வழக்கு போடுவேன் என்றால் வேலுமணியின் அராஜகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டாமா? அமைதிக்குப் பேர் போன கோவையை கொந்தளிக்கும் நகரமாக மாற்றிய வேலுமணிக்கு தக்க பாடம் புகட்டுங்கள்! அதிமுக என்ற அரசியல் இயக்கத்தை எம்.ஜி.ஆர். அவர்கள் உருவாக்கினார்கள். ஜெயலலிதா அதனை நடத்தினார்கள்.

அரசியல் ரீதியாக அவர்களுக்கும் நமக்கும் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் உண்டு. அது வேறு. ஆனால் இருவருக்கும் ஆளுமைத் திறன் இருந்தது. அத்தகைய ஆளுமைத் திறன் இல்லாதவர் பழனிசாமி. அவரை முதலமைச்சர் ஆக்குவதற்காக மக்கள் வாக்களிக்கவில்லை. வேறு வழியில்லாமல் முதலமைச்சர் ஆக்கப்பட்டவர் பழனிசாமி. அந்தப் பதவியை வைத்து தமிழ்நாட்டுக்கு ஏதாவது நன்மை செய்திருக்கிறாரா என்றால் இல்லை.

கெடுதலை மட்டுமே அதிகமாகச் செய்திருக்கிறார். தமிழ்நாட்டின் மானத்தையே அடமானம் வைத்துவிட்டார். டெல்லி பாஜக தலைமைக்கு கொத்தடிமையாக அடிமைசாசனம் எழுதிக் கொடுத்துவிட்டார். சாதாரண பழனிசாமி, யாருக்கு அடிமை ஆனாலும் அதைப்பற்றி நமக்கு கவலை இல்லை. ஆனால் அவர் சாதாரண பழனிசாமி அல்ல, முதலமைச்சர் பழனிசாமி.தமிழ்நாட்டின் முதலமைச்சர். தமிழகத்தின் உரிமையை அடமானம் வைத்து முதலமைச்சராக நீடித்து வருகிறார்.