வண்டில ஏறும்போது கலையாத தலைமுடி, சீட்டில் அமர்ந்தவுடன் கலைந்த அதிசயம்.! யம்மா.. ஜோதிமணி… இது உலக மகா நடிப்புமா சாமி.!

0
Follow on Google News

கரூர் லைட்ஹவுஸ் ரவுண்டானாவில் காந்தி சிலை மாற்றப்பட்டதைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட எம்.பி. ஜோதிமணி உள்ளிட்ட காங்கிரஸாரை கரூர் நகர போலீஸார் கைது செய்தனர்.கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பாக கரூர் லைட்ஹவுஸ் கார்னர் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த காந்தி சிலை சிதிலமடைந்த காரணத்தால் புதியதாக சிலை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. அந்த சிலை அமைக்கும் பணியை பார்வையிட சென்ற கரூர் மக்களவை உறுப்பினர் எஸ்.ஜோதிமணி கட்டுமானப் பணிகள் மிகவும் தரமற்ற முறையில் இருப்பதாக கூறி கடும் ஆட்சேபனையை தெரிவித்தார்.

சிலையின் பீடத்தில் கை வைத்ததுமே, அவை அனைத்தும் உதிர்ந்து போகிற வகையில் தரமற்ற வகையில் அமைக்கப்படுவதை உடனடியாக நிறுத்த வேண்டும், காந்தியின் சிலைக்கு அமைக்கப்படுகிற அடித்தளம் வலுவானதாக இருக்க வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து சுமார் 50க்கு மேற்பட்ட காங்கிரஸார் போராட்டம் நடத்தினார்.காவல் துணை கண்காணிப்பாளர் முகேஷ்ஜெயகுமார் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் போராட்டத்தை கைவிட மறுத்து காவல் துறையினரை கண்டித்து காங்கிரஸார் கோஷங்கள் எழுப்பினர்.

இதனை தொடர்ந்து கட்டுமான பணிக்கு இடையூறு ஏற்படுத்தாமல் கலைந்து செல்ல தொடர்ந்து போலீசார் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர், ஆனால் அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர், இதனை தொடர்ந்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய முயன்ற போது அங்கே தள்ளு முள்ளு ஏற்பட்டது, இந்நிலையில் போராட்டத்தில் இடுப்பட்டவர்களை விட போலீசார் அங்கே அதிகமாக இருந்ததால் ஜோதிமணி உடட்பட காங்கிரஸாரை போலீஸார் கைது செய்து குண்டுகட்டாக தூக்கி போலீஸ் வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்

காங்கிரஸார் கைது செய்யப்பட்டதை அடுத்து ரவுண்டானாவில் மீண்டும் பணிகள் தொடங்கின.போலீசார் காங்கிரஸ் எம்பி ஜோதிமணியை கைது செய்து குண்டுக்கட்டாக தூக்கி போலீஸ் வாகனத்தில் ஏற்றியபோது வெளியான புகைப்படத்தில் அவரது தலைமுடி கலையாமல் இருந்தது, கைது செய்து ஜோதிமணி போலீஸ் வாகனத்தில் அழைத்து சென்ற போது, கைது செய்யப்பட்டதை கண்டித்து போலீஸ் வாகனத்தில் இருந்தபடியே பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் ஜோதிமணி.

அந்த விடியோவில் ஜோதிமணி தலைமுடி கலைந்து காணப்பட்டது, இதற்கு சமூக வலைதளவாசிகள் தங்களின் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர், அதில், வண்டில ஏறும்போது கலையாத தலைமுடி சீட்டில் அமர்ந்தவுடன் கலைந்த அதிசயம், யம்மா.. ஜோதிமணி… இது உலக மகா நடிப்புமா சாமி என்றும், நடிகையர் திலகம் சாவித்திரி இல்லாத குறையை போக்க வந்த மஹா நடிகையே..வாழ்க வாழ்க என்றும், அடுத்தமுறை நன்கு பயிற்ச்சி எடுத்து முயற்ச்சி செய்யுங்க என வலைதளவாசிகள் பதிவு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.மேலும் இது போன்ற செய்திகளை உங்கள் வாட்ஸாப் செயலில் பெற 8925154074 என்ற எண்ணிற்கு “ACT NEWS” என்று மெசேஜ் செய்யவும் .