விவசாயிகள் கண்ணீரில் களிநடம் போடுகிறது அ.தி.மு.க. அரசு..! முக ஸ்டாலின் கடும் தாக்கு..!

0
Follow on Google News

வெங்காயத்தின் விலை உயர்வு குறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், சாதாரண சமையலுக்கும் பயன்படுத்தப்படும் வெங்காயத்தின் விலை பதுக்கப்பட்டதால் கிலோ ரூ.130,! விளைந்த நெல்மணிகளை விற்க முடியாமல் விவசாயிகள் கண்ணீர்! வெங்காயத்தின் தாங்க முடியாத விலை உயர்வால் தாய்மார்கள் கண்ணீர்! இந்தக் கண்ணீரில் களிநடம் போடுகிறது அ.தி.மு.க. அரசு!

வேளாண் சட்டங்கள் அமலானால், பதுக்கல் மேலும் அதிகரித்து வெங்காய விலை எவ்வளவு வேண்டுமானலும் உயரும்! இனியாவது திரு. பழனிசாமியின் அ.தி.மு.க அரசு வேளாண் சட்டங்களை அனுமதிக்கக் கூடாது, வெங்காயத்திலும் ஊழலுக்கு வழிகண்டு விடாமல், அனைவருக்கும், நியாய விலையில் வெங்காயம் கிடைக்கப் போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.