இந்து சனாதன தர்மத்தில் அணைத்து பெண்களும் விபச்சாரிகள்..! திருமாவளவன் சர்ச்சை பேச்சால் கொந்தளிக்கும் இந்துக்கள்.!

0
Follow on Google News

விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், தொடர்ந்து இந்து கடவுள்களையும் இழிவாக பேசி சர்ச்சையில் சிக்குவது வழக்கம். கடந்த 2017 ஆம் ஆண்டு, பெரம்பூாில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தொல்.திருமாவளவன் பேசுகையில், தற்போது சிவன்கோவில்களும், பெருமாள் கோவில்களும் அமைந்துள்ள இடங்கள் அனைத்தும் ஒருகாலத்தில் பௌத்த விகாா்களாக இருந்தன. அந்த பௌத்த விகாா்களை இடித்துவிட்டுதான் சிவன் கோவில்கள் கட்டப்பட்டுள்ளன, பெருமாள் கோவில்கள் கட்டப்பட்டுள்ளன.

அந்த கோவில்களை இடித்து தரைமட்டமாக்கிவிட்டு அவற்றின் மீது புத்த விகாா்களைக் கட்டுங்கள் என்றார், மேலும், திருவரங்கநாதா் படுத்திருக்கக்கூடிய இடத்திலும், காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் அமைந்துள்ள இடத்திலும் புத்த விகாா்கள் கட்டப்படவேண்டும் என திருமாவளவனின் பேச்சு பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது, அதே போன்று கடந்த ஆண்டு சமீபத்தில் புதுச்சேரியில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய திருமாவளவன்,

இந்து கோவில்களில் உள்ள சிலைகள் ஆபாசமாக இருப்பதாகவும், கூம்பு வடிவல் இருந்தால் அது மசூதி, அதிக நீளம் கொண்டிருந்தால் அது தேவாலயம், அசிங்கமான சிலைகளை கொண்டிருந்தால் அது கோவில் என்று பேசியிருந்தார். இதற்கு இந்துக்கள் மத்தியில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியது, இப்படி தொடர்ந்து இந்து கோவில்கள், இந்து கடவுள்களை இழிவாக பேசி வரும் திருமாவளவன், தற்போது மீண்டும் இந்து சனாதன தர்மத்தை இழிவு படுத்தும் விதத்தில் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பெரியார் வலைக்காட்சியில் பேசிய திருமாவளவன், அணைத்து பெண்களும் விபச்சாரிகள் தான், கடவுளால் அவ்வாறு தான் படைக்க பட்டவர்கள், ஆண்களுக்கு இவர்கள் கீழானவர்கள், என சனாதன தர்மம் சொல்வதாக திருமாவளவன் தற்போது பேசியுள்ள வீடியோ சமூக வளைத்தளத்தில் வைரலாகி இந்துக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.