செங்கல்பட்டு நிவாரண முகாமில் முதல்வர் விசிட்… சாலையோரம் அமர்ந்து டீ சாப்பிட்டு பொதுமக்களுடன் செல்ஃபி…

0
Follow on Google News

செங்கல்பட்டு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரடியாக விசிட் செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின். சாலையோரம் அமர்ந்து டீ விருந்து சில்பி என பொதுமக்களுடன் உற்சாகமளிக்கும் தான் சென்னை செங்கல்பட்டு மாவட்டம் மாம்பாக்கம் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாமில் தங்கியிருக்கும் மக்களை நேரடியாக சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

நிவாரண முகாமில் உள்ள மக்களுக்கு உணவு மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்கினார். இதன்பிறகு சாலையோரம் உள்ள ஒரு டீக்கடையில் காரை நிறுத்தி தன்னுடன் வந்த எம்பி டி.ஆர்.பாலு மற்றும் அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரி களுடன் டீ சாப்பிட்டார். அந்த நேரத்தில் அங்குள்ள மக்களிடம் அங்கு உள்ள வெள்ள பாதிப்பு குறித்து விசாரித்தார்.

மேலும் அவர்களுக்கான நிவாரணப் பொருட்கள் மற்றும் உதவிகள் சரியாக கிடைக்கிறதா? என்று அங்குள்ள மக்களிடம் நேரடியாக விசாரித்தார். மேலும் செல்பி எடுக்க ஆசைப்பட்ட பொதுமக்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் செல்பி எடுத்துக்கொண்டார். இதன் பிறகு அடையாறு மற்ற பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளை பார்வையிட முதல்வர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டு சென்றார்.