எட்டு பாஜக மாவட்ட தலைவர்கள் அதிரடி மாற்றம்..! விரைவில் வெளியாக இருக்கும் அடுத்த லிஸ்டில் எந்தத்த மாவட்டம் தெரியுமா.? அண்ணாமலை அதிரடி…

0
Follow on Google News

தமிழக பாஜக தலைவராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை பொறுப்பேற்ற பின்பு கட்சிக்குள் பல்வேறு மாற்றங்களை அதிரடியாக செய்து வருகிறார். சில வாரங்களுக்கு முன்பு அண்ணாமலை தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில், அரசியல் பாணியை நான் கொஞ்சம் மாற்ற விரும்புகிறேன். தனிநபர் தொடர்புக்குப் பதிலா இந்த நிர்வாகத் தொடர்பை உருவாக்க நினைக்கிறேன். அதற்காகத்தான் அனைத்து மாவட்டத் தலைவர்களிடமும், “மாதாந்திர தகவல் அறிக்கை”, கண்டிப்பாக கேட்கப்படுகிறது,

செப்டம்பர் மாத அறிக்கையை தினசரிப் பட்டியலாக ஒரு சில மாவட்டங்களைத் தவிர பல மாவட்டத் தலைவர்கள் உற்சாகமாக அனுப்பியுள்ளனர். எனக்கு இப்போதுதான் தெரிகிறது ஒரு சில மாவட்டங்களில் மிகமிக உற்சாகமாக வேலைகள் நடக்கின்றன. அவர்களை நான் தனித்தனியே தொடர்பு கொண்டு பேசுவேன். என்னை மாவட்டத் தலைவர்கள் அடிக்கடி வந்து பார்க்கணும் காலையில் ஒரு குட் மார்னிங், இரவில் ஒரு குட் நைட் சொல்லனும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஏன் என்னை வந்து பாக்கல அப்படின்னு நான் உங்களை கேள்வியும் கேட்கப் போறதில்லை ஆனால் மக்களைச் சென்று பார்க்கவில்லை என்றால் கண்டிப்பாக உங்களைக் கேள்வி கேட்பேன்.

நான் மாநிலம் முழுக்க மக்களைச் சந்திக்கப் போவது போல நீங்க உங்க மாவட்டம் முழுக்க பயணிக்கணும், மக்களைச் சந்திக்கப் போங்க நான் எப்போது உங்களைச் சந்திக்க வேண்டுமோ அந்தநேரமும் காலமும் தேவையும் வரும்போது கண்டிப்பாக ஒன்று நான் உங்கள் இடத்திற்கு வந்து உங்களைச் சந்தித்துப் பேசுவேன் அல்லது உங்களை அழைத்துப் பேசுவேன். இன்னும் மூன்று ஆண்டுகளுக்குள்ளாக அடுத்த பாராளுமன்ற தேர்தல் வர இருக்கிறது. மூன்றாண்டுகள் நீண்ட காலம் இல்லை அது ஒரு குறுகிய காலக்கெடு.

அதற்குள்ளாக நாம் ஒரு அடையாளத்தை மக்கள் மனதில் ஏற்படுத்த வேண்டும். அதற்கு உங்கள் அனைவரின் ஒத்துழைப்பும் எனக்கு வேண்டும். நாமெல்லாம் ஒரே டீம் இதில் யாரும் பெரியவங்க, சின்னவங்க அப்படிங்கிற பேதம் கிடையாது. கட்சியைப் பொருத்தவரை நீங்கள் ஒரு பாஜக நிர்வாகி நானும் ஒரு பாஜக நிர்வாகி அவ்வளவே.

ஒரு மாநிலத் தலைவராக நான் ஒவ்வொரு நிமிடத்தையும் பயனுள்ளதாகச் செலவிட முழுமுயற்சி செய்கிறேன். நான் அறைக்குள்ளே அமர்ந்து அரசியல் செய்ய விரும்ப வில்லை, மக்களிடத்தில் இருக்க விரும்புறேன். மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்கக் கூடிய நபராக இருக்க விரும்புறேன். அதையே நம் மாவட்ட /மண்டல்/பூத் தலைவர்களிடமும் நான் எதிர்பார்க்கிறேன். என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சில மாவட்ட தலைவர்கள் அதிரடியாக மாற்றப்படலாம் என செய்திகள் வெளியான நிலையில், சிபாரிசின் அடிப்படையில் அல்லது ஜால்ரா போட்டு காக்கா பிடித்து பதவியை பெற்று விடலாம் என நினைத்தவர்கள் பருப்பு அண்ணாமலையிடம் வேக வில்லை, தனக்கென டெல்லி பாஜக துணையுடன் உளவு அமைப்பு ஓன்று நடத்திய ஆய்வு பணிக்கு பின்பு கொடுக்கப்பட்ட ரிப்போர்ட் அடிப்படையில் புதிய மாவட்ட தலைவர்களை அண்ணாமலை தற்போது நியமித்துள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது எட்டு மாவட்ட தலைவர்கள் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், விரைவில் அடுத்த லிஸ்ட் வெளியாக இருப்பதாக கூறபடுகிறது. அதில் எந்தத்த மாவட்டம் இடம்பெற போகிறது என்பது தற்போது வெளியான லிஸ்ட் வெளியாகும் வரை எப்படி ரகசியமாக ஆய்வு செய்து அதிரடியாக அறிவிப்பு வெளியானதோ அதே நடைமுறை பின்பற்றபடும் என எதிர்பார்க்க படுகிறது. இதில் அதிக ரீமார்க் உள்ள மாவட்ட தலைவர்கள் கடும் பீதியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடதக்கது.

எந்த ஒரு சுய அறிவு இல்லாமல் தமிழக முதல்வர் முக ஸ்டாலின், கேரள முதல்வருக்கு நன்றி சொல்கிறார். தமிழக முதல்வர் வடிவேலு போன்று பேசக்கூடாது. – அண்ணாமலை