இதே கேள்வியை கனிமொழியிடம் கேளுங்கள்.! நெட்டிசனின் டிவீட்டர் கேள்விக்கு H.ராஜா அதிரடி பதில்.!

0
Follow on Google News

தமிழக பாஜக தமிழகம் முழுவதும் நடத்த இருக்கும் வெற்றிவேல் யாத்திரை தற்போது தமிழக அரசியலில் பெரும் விவாத பொருளாக மாறியுள்ளது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிப்புக்கு பதிலளித்துள்ள தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், நாங்கள் எதிர்ப்பை கண்டு அஞ்சுபவர்கள் அல்ல! துள்ளி வரும் வேல்! வேல் யாத்திரை தமிழகம் முழுவதும் உலா வரும் என தெரிவித்தார், மேலும், தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள மத்திய அரசின் திட்டங்களை மக்கள் மத்தியில் எடுத்து சொல்வதே யாத்திரையின் நோக்கமாகும்.

இந்த யாத்திரை தமிழகத்தில் மிகப்பெரிய திருப்பு முனையை உருவாக்கும், பா.ஜ.க, என்றைக்கும் பிரச்னை ஏற்படுத்தியது இல்லை. பா.ஜ.க, தொண்டர்கள் ஒழுக்கத்திற்கு கட்டுப்பட்டவர்கள். யாத்திரையின் போது லட்சக்கணக்கானோர் பா.ஜ.க,வில் இணைய உள்ளனர் என தெரிவித்த எல்.முருகன், எங்கள் வெற்றிவேல் யாத்திரையை கண்டு, ஸ்டாலின் நடுக்கத்தோடு உள்ளார், யாத்திரையை எதிர்ப்போர், கலவரம் உண்டாக்க திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்து, தமிழக காவல் துறை விசாரித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் கேட்டு கொண்டார்.

இந்நிலையில் தற்போது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள பாஜக நடத்தும் வெற்றி வேல் யாத்திரை குறித்து திமுக எம்பி கனிமொழி தனது டிவீட்டர் பக்கத்தில், தமிழ்க் கடவுளாக கொண்டாடப்படும் முருகனுக்கு யாத்திரை நடத்தவேண்டும் என்று அனுமதி கேட்கும் தமிழக பாஜக, அது போலவே தமிழைத் தேசிய மொழியாக்கவும் கோரிக்கை வைக்குமா? என கனிமொழி கேள்வி எழுப்பினர், இதற்கு பதிலளித்துள்ள பாஜக முக்கிய தலைவர் H.ராஜா தனது டிவீட்டர் பக்கத்தில்,

முதலில் தேவர் பெருமானாரின் குருபூஜையில் திருநீறை தட்டி கீழே கொட்டிய நீங்கள் குல்லா போடாம நோம்பு கஞ்சி குடிக்க தயாரா என்று சொல்லுங்க என H.ராஜா தெரிவித்திருந்தார், இதற்கு வலைதளவாசி ஒருவர், எதை கேட்டாலும் சுத்தி சுத்தி கடைசில வந்து நிக்குற இடம் மதம்… மதத்தை விட்டா வேற எதுவும் தெரியாதா ராஜா ஐயா..என கேள்வி எழுப்ப, அதற்கு இதே கேள்வியை திருமதி.கனிமொழி அவர்களிடம் கேளுங்கள் என H.ராஜா அதிரடியாக பதிலளித்துள்ளார்.