சிறையில் இருந்து மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட பப்ஜி மதன்!

0
Follow on Google News

ஆபாசமாக பேசி இளைஞர்களை தவறாக வழிநடத்தியதாக கைது செய்யப்பட்ட பப்ஜி மதன் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. சென்னையை சேர்ந்த பப்ஜி மதன் தன்னுடைய யுடியூப் சேனலில் தடைசெய்யப்பட்ட பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடி ஆபாசமாக பேசி சிறுவர்களை தவறாக வழிநடத்தியதாக கைது செய்யப்பட்டார். இதில் அவரின் மனைவியும் உடந்தையாக இருந்ததாக கைது செய்யப்பட்டு இப்போது ஜாமினில் வெளிவந்திருக்கிறார்.

இந்நிலையில் புழல் சிறையில் விசாரணைக் கைதியாக இருக்கும் மதன் கடந்த சில வாரங்களாக முதுகுவலியால் பாதிக்கப்பட்டதாகவும், அதற்காக சிறை மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்ததாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் வலி குறையாததால் நேற்று அவர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.