பள்ளிக்கு தாலியுடன் வந்த 9 ஆம் வகுப்பு மாணவி… பாய்ந்தது போக்ஸோ!

0
Follow on Google News

மதுரை அருகே தனியார் பள்ளி ஒன்றில் படிக்கும் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி கழுத்தில் தாலியோடு பள்ளிக்கு வந்துள்ளார். மதுரை அருகே உள்ள தனியார் பள்ளிக்கு வந்த ஒன்பதாம் வகுப்பு மாணவி ஒருவர் அதிர்ச்சி அளிக்கும் விதமாக கழுத்தில் தாலியோடு வந்துள்ளார்.

இதனால் அவர் கட்டாய திருமணம் செய்ய வைக்கப்பட்டு இருப்பாரா என்ற சந்தேகம் எழுந்தது இதுபற்றி தகவல் அறிந்த சமூக நலத்துறை அதிகாரிகள் மாணவியை மீட்டு காப்பகத்தில் சேர்த்துள்ளனர்.

இது சம்மந்தமாக நடந்த விசாரணையில் மாணவிக்கு கட்டாயமாக திருமணம் செய்துவைத்த மாணவியின் பெற்றோர் மற்றும் அவரை திருமனம் செய்த அருண் பிரகாஷ் என்ற இளைஞர் மற்றும் அவரின் பெற்றோர் ஆகியவர்கள் மீது போக்ஸோ சட்டம் பாய்ந்து கைது செய்யப்பட்டுள்ளது.