ஹர்திக் பாண்டியா இருந்தால் நான் இருக்க மாட்டேன்…. அவமானம் தாங்க முடியாமல் மும்பை அணியில் இருந்து வெளியேறும் மலிங்கா…

0
Follow on Google News

ஐபிஎல் சீசன் தொடங்கியதில் இருந்து மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கடுமையான விமர்சனத்துக்கு ஆளாகி வருகிறார். மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன்சி தகராறு காரணமாக ஹர்திக் பாண்டியா ரோஹித் சர்மா இடையே புகைச்சல் இருப்பதாக பேசப்பட்டு வந்த நிலையில், தற்போது அந்த அணியின் பவுலிங் பயிற்சியாளர் ஆன லஷிப் மலிங்காவுடனும் ஹர்திக் பாண்டியாவுக்கு சுலபமான உறவு இல்லை என்பது தெரிய வந்துள்ளது.

இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற முடிந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி படு தோல்வி அடைந்தது. அன்றைய ஆட்டத்தின் முடிவில் ஹர்திக் பாண்டியா மலிங்காவிடம் நடந்து கொண்ட விதம் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் அதிர்ச்சி அடையச் செய்தது. இது தொடர்பாக வெளியான வீடியோவில், ஆட்டம் முடிந்த உடன் அணி வீரர்கள் கைகுலுக்கி வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.

அப்போது மும்பை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மலிங்கா ஹர்திக் பாண்டியாவை கட்டி அணைக்க முயற்சி செய்கிறார். ஆனால் ஹர்திக் பாண்டியா தோல்வி அடைந்த கடுப்பில் மலிங்காவை கண்டு கொள்ளாமல் அவரது கையால் தட்டி விட்டு சென்றார். இது மலிங்காவுக்கு பெருத்த அவமானத்தை ஏற்படுத்தியது ..இருப்பினும் அந்த சமயத்தில் அவர் அதை காட்டிக் கொள்ளாமல் அங்கிருந்து நகர்ந்து சென்று விடுகிறார.

ஹர்திக் பாண்டியாவின் இத்தகைய நடத்தை அவருக்கும் மலிங்காவுக்கும் இடையே பிரச்சனை இருப்பதே அப்பட்டமாக வெளிப்படுத்தியது. அதே சமயம் இணையவாசிகள் ஹர்திக்கின் திமிரான செயலுக்கு எதிராக விமர்சனங்களை தெரிவித்து வந்தனர். இருப்பினும் சிலர் அவர்கள் இருவரும் எதார்த்தமாகத்தான் செல்கிறார்கள் என்று கமெண்ட் செய்தனர். ஆனால் தற்போது மற்றொரு அதிர்ச்சியூட்டும் வீடியோ வெளியாகி உள்ளது.

அந்த வீடியோவில், போட்டியின் போது மைதானத்தில் பவுண்டரிக்கு வெளியே மும்பை அணியின் பயிற்சியாளர் கீரான் பெள்ளார்டு மற்றும் பவுலின் பயிற்சியாளர் மலிங்கா அருகருகே அமர்ந்திருக்கின்றனர். அப்போது ஹர்திக் தண்ணீர் குடிப்பதற்காக அங்கே வருகிறார். அங்கு அமர்ந்திருந்த மலிங்கா முகத்துக்கு நேராக நின்று கொண்டு பெள்ளார்டிடம் பேச்சு கொடுக்கிறார். அப்போது மலிங்கா கோபமான முகத்துடன் இருக்கையை விட்டு எழுந்து அந்த இடத்தை விட்டு வேகமாக வெளியேறுகிறார்.

மலிங்கா சென்றவுடன் அதே இடத்தில் ஹர்திக் பாண்டியா உட்காருகிறார். இப்படி இரண்டு வீடியோக்களில் ஹர்திக் பாண்டியா மலிங்காவை மதிக்காமல் தெனாவட்டாக நடந்து கொள்ளும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே மும்பை அணி தோற்றதற்கு ஹர்திக் பாண்டியா கேப்டன்சி தான் காரணம் என்று மும்பை அணி ரசிகர்கள் விமர்சித்து வரும் நிலையில், ஹர்திக் பாண்டியின் அடாவடித்தனமான நடவடிக்கைகள் ரசிகர்களை மேலும் கொந்தளிக்க செய்துள்ளது.

மேலும் ஹர்திக் பாண்டியாவால் தொடர் அவமானங்களை சந்தித்து வரும் மலிங்கா கூடிய சீக்கிரம் மும்பை அணியிலிருந்து விலக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது ஐபிஎல் தொடர் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் நடுவில் விலக முடியாது என்பதால், பொறுமையை கடைபிடிக்கும் மலிங்கா இந்த ஐபிஎல் போட்டி முடிந்ததும் விலகிவிடும் திட்டத்தில் இருப்பதாகவும், இது தொடர்பாக தன்னுடைய விலகல் குறித்து மும்பை அணியின் நிர்வாகத்திடம் தெரிவித்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இப்படியே ஹர்திக் பாண்டியா மீது மும்பை அணி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை இல்லை என்றால், கடையில் முக்கிய வீரர்கள் ஒவ்வொருவராக வெளியேறி இறுதியில் ஹர்திக் பாண்டியா மட்டும் தான் மும்பை அணியில் இருக்கும் சூழல் உருவாகும் என மும்பை அணியை எச்சரிக்கின்றனர் கிரிக்கெட் விமர்சகர்கள்.