சிவகார்த்திகேயன் தந்தையை கொலை செய்த எம்.எல்.ஏ யார் தெரியுமா.? திடுக்கிடும் தகவலை வெளியிட்ட தேசிய கட்சி தலைவர்.!

0
Follow on Google News

சமீபத்தில் இந்து அறநிலை துறை அமைச்சர் சேகர் பாபு தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு பின் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு, திருக்கோயில்களில் நடைமுறையில் உள்ள பல்வேறு பதிவேடுகளை ஸ்கேன் (Scan) செய்து இணையத்தில் பதிவேற்றம் (Uploading) செய்தல். திருக்கோயில் நிலங்கள் மற்றும் கட்டடங்களின் விவரங்களை, பொதுமக்கள் கணினிவழியில் பார்வையிடும் வகையில் புவிசார்குறியீடு செய்து இணையத்தில் வெளியிடுதல். (Publishing)

திருக்கோயில் பெயரில் உள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகளின் உரிமை ஆவணங்களை ஸ்கேன் (Scan) செய்து இணையத்தில் பதிவேற்றுதல் (Uploading). திருக்கோயில் சொத்து ஆக்கிரமிப்புகளை அகற்றல், நியாய வாடகை வசூலித்தல் மற்றும் திருக்கோயில் வருவாயினங்களைப் பெருக்கும் வகையில் விரைந்து
செயல்படுதல். என அதிரடி அறிவிப்பை அறநிலை துறை அறிவித்தது, இந்த அறிவிப்பை வரவேற்று செய்தியாளர் சந்திப்பின் போது பாராட்டுகளை தெரிவித்த பாஜக மூத்த தலைவர் H.ராஜா.

தொடர்ந்து அவர் பேசுகையில் ஜாக்கி வாசுதேவ் அவர்களை தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மிரட்டும் தோணியில் பேசியுள்ளது கடும் கண்டனத்துக்கு உள்ளானது. ஒரு இந்து சந்நியாசி என்றால் தியாகராஜன் மிரட்டுவாரா.? வனப்பகுதியை ஆக்கிரமித்துள்ள காருண்யா பற்றி தமிழக்தில் இருக்கும் எதாவது ஒரு அமைச்சருக்கு பேச தைரியம் இருக்கா.? என கேள்வி எழுப்பிய H.ராஜா மேலும் PTR தியாகராஜன் பின்னணி குறித்து விசாரிக்கப்படும் என தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சொத்துக்களை மீட்கப்படும் என்று ஒரு வார்த்தை தியாகராஜன் சொன்னால், நான் பேசிய வார்த்தைகளை வாபஸ் வாங்கி கொள்கிறேன்,ஹிந்து சாது சந்நியாசிகளை பற்றி யார் இழிவாக பேசினாலும் அவர்களின் பின்னனி என்ன என்பது பற்றி நோன்டி எடுக்கப்படும், அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் ,அதனால் PTR தியாகராஜன் நாவை அடக்க வேண்டும் என எச்சரித்த H.ராஜா.

மேலும் எனக்கு செய்வதற்கு வெட்கமாக இருக்கிறது, ஜெயிலர் ஜெயப்ரகாஷை கொலை செய்த அல்லுமா ஆட்களை சேர்ந்த ஒருவர் என்று பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர், அவருடைய மகன் இன்று பிரபல சினிமா நட்சத்திரம் சிவகார்த்திகேயன் என நடிகர் சிவகார்த்திகேயன் தந்தை கொலை பற்றி ஒரு திடுக்கிடும் தகவலை பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பாஜக மூத்த தலைவர் H.ராஜா பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது