த்ரில்லர் கலந்த சமூக சார்ந்த படம்.. போலீஸ் அதிகாரியாக மிரட்டு கவுதம் மேனன்..! புதிய படத்தின் அப்டேட்..

0
Follow on Google News

சென்னை : இயக்குனர் கே.வினோத் இயக்கத்தில் பிரபல நடிகர் ஒருவர் மீண்டும் கெளதம் வாசுதேவ் மேனனுடன் கைகோர்க்கிறார். அதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. டைரக்டராக மட்டுமல்லாமல் திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களிலும் கெளதம் வாசுதேவ் மேனன் தோன்றி வருகிறார்.

கவுதம் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளை இயக்குவதோடு மட்டுமல்லாமல் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த கதாபாத்திரங்களிலேயே நடித்து வருகிறார். தனது வேடம் சிறிது என்றாலும் தன்னிறைவுடன் நடித்து வருகிறார். அந்த வரிசையில் சமீபத்தில் வெளிவந்த செல்பி திரைப்படத்தில் அசத்தலாக நடித்திருந்தார். இயக்குனர் வெற்றிமாறனின் உதவியாளராக இருந்த மதிமாறன் அந்த படத்தை இயக்கியிருந்தார்.

மேலும் அரசியல்வாதிகள் தங்கள்து பினாமி பெயரில் மருத்துவக்கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரிகளை வைத்துக்கொண்டு அப்பாவி பெற்றோர்களை ஏமாற்றி பணத்தை சேர்ப்பது போல கொண்ட கதையமைப்பில் கௌதமுடன் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பொருளாதார ரீதியில் படு சறுக்கலை இந்த படம் சந்தித்திருந்தாலும் கவுதமின் கதாபாத்திரம் மிகவும் பேசப்பட்டது.

இந்நிலையில் இயக்குனர் வினோத் டைரக்சனில் அனீஸ் பிரபாகர் மற்றும் மெட்ராஸ் ஸ்டூடியோ தயாரிப்பில் உருவாகவுள்ள திரைப்படத்தில் கெளதம் வாசுதேவ் மேனன் மற்றும் ஜிவி பிரகாஷ் மீண்டும் இணைந்து நடிக்க உள்ளனர். இந்த படத்தில் ஜிவி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கிறார். முக்கிய ரோலில் கவுதம் நடிக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியாக உள்ளது.

இந்த திரைப்படம் த்ரில்லர் கலந்த சமூக கருத்துள்ள கதையாக எடுக்கப்படலாம் என கூறப்படுகிறது. மேலும் கவுதம் வழக்கம்போல போலீஸ் துப்பறியும் அதிகாரியாக நடிக்க உள்ளார். இதனால் படத்தின்மீதான எதிர்பார்ப்பு மேலும் கூடியுள்ளது. அடுத்த ஏப்ரலுக்குள் படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவுசெய்துள்ளனர்.