புதுபெண்ணை சுத்தியலால் தாக்கிய இளைஞன்… கோமா நிலையில் புது பெண்.. என்ன நடந்தது தெரியுமா.?

0
Follow on Google News

விருத்தாசலம் : கடலூர் மாவட்டத்தை சேர்ந்தா இளம்பெண்ணை ஒருவர் சுத்தியால் தாக்கியதில் அந்தப்பெண் சுயநினைவிழந்தார். அதையடுத்து அவரை முட்புதரில் வீசி சென்றதாக கூறப்படுகிறது. சம்பவத்தில் ஈடுபட்ட நபர்மீது கடும்நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் கார்மாங்குடி கிராமத்தை சேர்ந்தவர் அம்பலவாணன். இவரது மகன் ஸ்ரீதரன். அதேபோல குறிஞ்சிப்பாடி பெத்தநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் முருகேஸ்வரி (பெயர் மாற்றப்பட்டுள்ளது.) இவருக்கு இந்த மாதம் இறுதியில் திருமணம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் ஸ்ரீதர் அந்த பெண்ணை தனது பைக்கில் அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கார்மாங்குடி வெள்ளாற்று பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது வாக்குவாதம் முற்றி ஸ்ரீதர் மறைத்து வைத்திருந்த சுத்தியால் தலையில் சராமாரியாக தாக்கியுள்ளார். இதில் ரத்தவெள்ளத்தில் அந்த பெண் கூச்சலிட அருகில் வயலில் உழுதுகொண்டிருந்த விவசாயிகள் சத்தம் கேட்டு ஓடோடி வந்தனர்.

அப்போது ஒரு இளம்பெண் ரத்தவெள்ளத்தில் முட்புதரில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியாகியுள்ளனர். பின்னர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த கருவேப்பிலங்குறிச்சி காவல்துறையினர் பாதிக்கப்படபெண்ணை மேல்சிகிச்சைக்காக பாண்டிசேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

மேலும் தப்பியோடிய ஸ்ரீதரை போலீசார் கைதுசெய்துள்ள நிலையில் ஸ்ரீதர் தனது நண்பர்களுடன் சேர்ந்து அந்த இளம்பெண்ணை கூட்டுப்பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட முயன்றதாக இளம்பெண்ணின் உறவினர்கள் குற்றசாட்டை முன்வைக்கின்றனர்.மேலும் ஸ்ரீதரின் நண்பர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஒருகோடி நிவாரணம் வழங்கவேண்டும் எனவும் உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.