விஜய்க்கு போட்டியாக களத்தில் இறங்கிய விஜய் டிவி பிரியங்கா… துபாயில் என்ன செய்துள்ளார்கள் தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் கமல்ஹாசன் பார்த்திபன் இன்னும் பல நடிகர்கள் போன்று சினிமாவில் சம்பாதிக்கும் பணத்தை சினிமாவில் முதலீடு செய்து அந்த பணத்தை இழக்காமல், நடிகர் விஜய் சினிமாவில் கோடி கணக்கில் வாங்கும் சம்பளத்தை வெளியில் வெவ்வேறு தொழில்களில் முதலீடு செய்து, அதன்மூலம் பெரும் லாபத்தை சம்பாதித்து வருகிறார்.

அந்த வகையில் சென்னையில் தனது தாய் சோபா பெயரில் திருமண மண்டபம், மனைவி சங்கீதா பெயரில் திருமண மண்டபம் என ஆசையா அசையா சொத்துக்கள் விஜய்க்கு உண்டு. மேலும் இந்த திருமணம் மண்டபங்களை ரிலைன்ஸ் நிறுவனத்துக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளது. அதேபோன்று வெளிநாடுகளில் பல கோடி முதலீடு செய்து பெரும் லாபத்தை சம்பாரித்து வருகிறார் விஜய்.

விஜய் மனைவி சங்கீதா லண்டனைச் சேர்ந்த இலங்கை வாழ் பெண். அவருடைய மனைவி மூலம் லண்டனில் பெரும் தொகையை முதலீடு செய்து வருகிறார். அதேபோன்று இலங்கையிலும் அவர் மனைவி அவர் மனைவி மூலமாக பல கோடி முதலீடு செய்துள்ளார். தொழில் ரீதியாக முதலீடு செய்து வரும், அதே வேளையில் சொத்துக்களையும் வெளிநாடுகளில் வாங்கி வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் நடிகர் விஜய் சென்னையில் சுமார் 35 கோடி மதிப்பில் ஒரு அப்பார்ட்மெண்ட் வாங்கியுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் நடிகர் விஜய்க்கு சென்னையில் மட்டுமல்ல துபாயில் சுமார் 65 கோடி ரூபாய் மதிப்பில் ஒரு அப்பார்ட்மெண்ட் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் லண்டனில் சொந்தமாக பங்களா ஓன்று விஜய்க்கு இருப்பதாக கூறப்படுகிறது.

அதே நேரத்தில் விஜய் துபாயில் அப்பார்ட்மெண்ட் வாங்கியுள்ள அதே பில்டர் மூலம் விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருக்கும் ஈரோடு மகேஷ் மற்றும் பிரியங்கா போன்றவர்கள் சில கோடி மதிப்பில் அவர்களும் துபாயில் சொத்துக்கள் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .இந்த நிலையில் முன்னனி சினிமா நடிகர்களுக்கு போட்டியாக தொலைக்காட்சி தொகுப்பாளர்களும் வெளிநாடு, உள்நாட்டுகளிலும் சொத்துக்களை வாங்கி குவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

என் வீட்டு பக்கமே வர கூடாது என விரட்டியடிப்பு… வடிவேலு – சுந்தர் சி இடையில் நடந்தது என்ன தெரியுமா.?