சிவகார்திகேயனால் சிறை தண்டனையில் இருந்து தப்பிக்கும் லிங்குசாமி… என்ன நடந்தது தெரியுமா.?

0
Follow on Google News

லிங்குசாமி இயக்குனராக அறிமுகமான ஆனந்தம் என்கிற முதல் படத்திலே பல முன்னணி நடிகர்களை ஒன்றிணைத்து வெற்றியையும் கொடுத்தார். பொதுவாக புதுமுக இயக்குனர் படங்களில் இது போன்று பல ஆர்டிஸ்ட்கள் ஒரே படத்தில் நடிக்க தயங்குவார்கள். ஆனால் லிங்குசாமி அறிமுகமான முதல் படத்தில் மம்மூட்டி, முரளி, அப்பாஸ், சினேகா, தேவயானி, ரம்பா என அன்றைய முன்னணி ஆர்ட்டிஸ்ட்டுகள் நடித்தனர்.

இதுவே லிங்குசாமிக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டம் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் சினிமாவில் அடுத்தடுத்து மிகப்பெரிய வெற்றி படங்களை கொடுத்த லிங்குசாமி, ஒரே நேரத்தில் நான்கு விலை உயர்ந்த பிஎம்டபிள்யூ கார் வாங்கினார் என்கின்ற செய்தி கூட அப்போது வெளியானது. லிங்குசாமி தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டது தான் அவர் இன்று கடலில் தத்தளிப்பதற்கான காரணம்.

மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான கடல் படத்தை யாரும் வாங்க முன்வராத நிலையில், அதிக விலைக்கு வாங்கி வெளியிட்டு மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்தார் லிங்குசாமி. லிங்குசாமி இயக்கத்தில் அஞ்சான் படத்தை மிகப்பெரிய தொகைக்கு வாங்க பல நிறுவனம் போட்டி போட்ட நிலையில்,இந்த படத்தை தானே வெளியிடுவதாக வெளியிட்டு சுமார் 20 கோடி நஷ்டத்தை சந்தித்தார் லிங்குசாமி.

இதே போன்று உத்தமன் வில்லன் படத்தில் மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்தார். சமீபத்தில் அவருடைய இயக்கத்தில் வெளியான வாரியர் படத்தில் இவருக்கு 8 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்ட நிலையில், பாதி சம்பளத்தை மட்டும் பெற்றுக்கொண்டு மீதி சம்பளத்திற்கு தமிழ்நாடு விநியோக உரிமையை கேட்டு பெற்று அதில் மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்தார் லிங்குசாமி.

இப்படி தொடர்ந்து தப்பு கணக்கு போட்டு தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டுக் கொண்ட லிங்குசாமி, ஒவ்வொரு கட்டத் தோல்வியின் போது சம்பந்தப்பட்ட படத்தில் நடித்த நடிகர்கள் கமல்ஹாசன், சூர்யா, கார்த்தி ஆகியோரிடம் கால்ஷீட் கேட்டிருந்தார், அவர்களும் தருவதாக சம்மதம் தெரிவித்த நிலையில் ஏதோ ஒரு காரணத்தினால், அது தடை பெற்றுக் கொண்டிருந்தது.

இந்த நிலையில் தான் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல், லிங்குசாமி கொடுத்த காசோலை வங்கியில் பணம் இல்லாமல் திரும்பி வந்ததால், அவருக்கு ஆறு மாத சிறை தண்டனை நீதிமன்றம் விதித்துள்ளது. இதனைத் தொடர்ந்து லிங்குசாமியின் இந்த பரிதாப நிலையை பார்த்து அவருடைய சிறை தண்டனையிலிருந்து காப்பாற்ற லிங்குசாமி தயாரிப்பில் தான் கால் சீட் கொடுத்து நடிப்பதாக சிவகார்த்திகேயன் முன்வந்துள்ளார்.

சிவகார்த்திகேயன் உதவி செய்ய முன் வந்ததை தொடர்ந்து அடுத்தடுத்து நடிகர்கள் கார்த்திக், சூர்யா, கமல்ஹாசன் ஆகியோரும் லிங்குசாமி தயாரிப்பில் கால் சீட் கொடுக்க முன்வந்துள்ளார்கள். இதனால் அடுத்தடுத்து முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்களை இயக்கும் தயாரித்து, விரைவில் கடனை கட்டி சிறை தண்டனையில் இருந்து தப்பிக்க இருக்கிறார் லிங்குசாமி என கூறப்படுகிறது.

என் வீட்டு பக்கமே வர கூடாது என விரட்டியடிப்பு… வடிவேலு – சுந்தர் சி இடையில் நடந்தது என்ன தெரியுமா.?