நிறைமாத கர்ப்பிணியான மீனா… ரோஹிணிக்கு விஜயா வெச்ச ஆப்பு… .. சிறகடிக்க ஆசையில் அடுத்தடுத்து ட்விஸ்ட்…

0
Follow on Google News

விஜய் டிவி தொலைக்காட்சியில், தற்போது TRP-யில் பட்டையை கிளப்பி வரும் முக்கிய சீரியல் ‘சிறகடிக்க ஆசை’. தான் வேலை செய்த ரயிலில் அடிபட்டு இறந்த ஏழை குடும்பத்தை சேர்ந்த ஒருவரின் மகளை தன்னுடைய மூத்த மகனுக்கு அண்ணாமலை திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார். மூத்த மகனான மனோஜ் ஏழைப் பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடியாது என, திருமண மண்டபத்தில் இருந்து வெளியேறி விடுகிறார்.

இதைத்தொடர்ந்து தன்னுடைய அப்பாவின் பேச்சை கேட்டு, வேறு வழி இல்லாமல் இரண்டாவது மகனான முத்து… கதாநாயகியான மீனாவை திருமணம் செய்துகொள்கிறார். இஷ்டமில்லாமல் இந்த திருமணம் நடந்த நிலையில், ஒரு கட்டத்தில் கிராமத்தில் இருந்து முத்துவும் – மீனாவும் சென்னையில் வசிக்கும் அண்ணாமலை மற்றும் விஜயாவுடன் வந்து வாழ துவங்குகின்றனர்.

குடிகாரனாக இருக்கும் முத்து, தன்னுடைய மனைவிக்காக குடியை விட்டுவிட்டு… அனைவரும் ஆச்சர்யப்படும் அளவுக்கு மாறுகிறார். மேலும் தற்போது அண்ணாமலையின் மூன்று மகன்களுக்குமே திருமணம் நடந்து விட்டது. எனவே எப்படியும் முத்துவையும் மீனாவையும் வீட்டை விட்டு வெளியேற்ற விஜயா பிளான் போட்ட நிலையில், அது பலிக்காமல் போனது.

எனினும் தன்னுடைய மற்ற இரண்டு மருமகள்களும் பணக்கார வீட்டைச் சேர்ந்த பெண்கள் என்று, அவர்களுக்கு வலிய போய் வேலை செய்யும் விஜயா… மீனாவை மட்டும் மிரட்டி உருட்டி ஒரு வேலைக்காரி போல் நடத்துவதை வழக்கமாக வைத்துள்ளார். ரோகிணி, ஸ்ருதி ஆகிய இருவருமே வேலைக்கு போவதால்… அவர்கள் இருவருடன் ஒப்பிட்டால், மீனா எந்த விதத்திலும் சளைத்தவள் இல்லை என்பதை நிரூபிக்க, அவருக்கு நன்கு பூ கட்ட தெரியும் என்பதால் அவருக்கு முத்து தன்னுடைய வீட்டிற்கு வெளியிலேயே ‘விஜயா’ என்கிற பெயரில் புதிய பூ கடை ஒன்றை வைத்து கொடுக்கிறார்.

மாலை கட்ட வந்த பெரிய ஆர்டரை செய்து முடித்த மீனா… அதில் வந்த லாபத்தில் முத்து கார் இல்லாமல் இருப்பதால், அவருக்கு ஒரு புதிய கார் ஒன்றை வாங்கி கொடுக்கிறார். மீனாவின் இந்த செயல் விஜயாவை கடுப்பாகியது மட்டும் இன்றி, ரோகிணியிடம் சொல்லி… மனோஜிக்கு புதிய பிஸ்னஸ் வைத்து தர சொல்லி வற்புறுத்துகிறார். இந்த பிரச்சனை முடிந்த கையேடு… ஸ்ருதிக்கும் – ரோகிணிக்கும் ஒரே நாளில் தாலி பிரித்து கோர்க்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் ரோகிணியின் தந்தை கலந்து கொள்ள வேண்டும் என கட் அண்ட் ரைட்டாக விஜயா கூறியுள்ள நிலையில்… ரோகிணி இதற்காக என்ன செய்ய போகிறார் என்பது விடை தெரியாத கேள்வியாக இருந்து வருகிறது. இப்படியான நிலையில் மீனா கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ஆனால் அது இந்த சீரியலில் எடுத்த புகைப்படம் கிடையாது. சிறகடிக்க ஆசை சீரியல் தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம் ஹிந்தி, தெலுங்கு என்று பல மொழிகளில் ஒளிபரப்பாகி வரும் நிலையில் அதில் கோமதி பிரியா தமிழிலும் மலையாளத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

அதுபோல சில ஷார்ட்பிலிம்களிலும் நடித்திருக்கிறார். அப்படி ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் அண்ணா சீரியலில் முத்துப்பாண்டி கேரக்டரில் வில்லனாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் சத்யாவோடு கோமதி பிரியா நடித்த ஒரு வீடியோ கிளிப்ஸ் தான் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அதில் உள்ள புகைப்படங்கள் தான் இந்த புகைப்படங்கள். ஆனால் ரசிகர்கள் இந்த சீரியலில் மீனா கர்ப்பமாக இருப்பது போன்று காட்சிகள் வரப்போகிறதா என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

ஒருவேளை மீனா நிஜமாகவே கர்ப்பமாக இருந்தால், அண்ணாமலையின் அம்மா அதாவது முத்துவின் பாட்டி சொன்னது போல் கிராமத்தில் உள்ள சொத்துக்கள் அனைத்தும் மீனாவின் பிள்ளைக்கு வந்து சேரும். இது விஜயாவின் ஆசைக்கு மிகப்பெரிய ஆப்பாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதே போல் மீனா கர்ப்பமானால் பல பிரச்சனைகளை விஜயா ஏற்படுத்துவார் என கூறப்படுகிறது. இனிவரும் வாரங்களில் எப்படி சீரியல் நகரும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.