நயன்தாராவை சத்தமே இல்லாமல் காலி செய்யும் திரையுலகம்… சந்தர்ப்பத்தை சாதகமாக்கி கொண்ட ஐஸ்வர்யா ராஜேஷ்…

0
Follow on Google News

இயக்குனர் விக்னேஷ் சிவனை சுமார் ஏழு வருடங்கள் காதலித்து வந்த நடிகை நயன்தாரா கடந்த வருடம் சென்னை மகாபலிபுரம் அருகே முக்கிய விஐபிகள் மட்டும் பங்குபெறும் வகையில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெற்றது. சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளில் முதல் இடத்தில் இருந்த நயன்தாரா மார்க்கெட் உச்சத்தில் இருக்கும் போதே விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார்.

அந்த வகையில் பாலிவூட் நடிகைகள் பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன் போன்று திருமணத்திற்கு பின்பு தொடர்ந்து சினிமாவில் நடித்து தன்னுடைய மார்க்கெட்டை தக்க வைத்து கொள்ள திட்டமிட்டிருந்தார் நயன்தாரா. அதற்கு ஏற்றார் போல் திருமணத்திற்கு பின்பு தொடர்ந்து படத்தில் நடிப்பதற்காக அவருடைய கைவசம் பல படங்கள் இருந்தது, மேலும் திருமணம் முடிந்து ஹனிமூன் முடித்த கையோடு ஷாருக்கான் ஜோடியாக ஜவான் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

ஆனால் திருமணத்திற்கு பின்பு நயன்தாரா நடிப்பில் வெளியான ஓ 2, கனெக்ட் ஆகிய படங்கள் மிக பெரிய தோல்வியை சந்தித்தது, மேலும் இரண்டு படங்களும் ஹீரோயின் சப்ஜெக்ட் படம் என்பதால் இந்தப்படத்தின் முழு தோல்விக்கும் நயன்தாரா தான் காரணம் என்றும், இயக்குனர் சொல்வதை கேட்க்காமல், படப்பிடிப்பில் பல குளறுபடியை நயன்தாரா ஏற்படுத்தியதால் தான் இந்த இரண்டு படங்களும் மிக பெரிய தோல்வியை சந்தித்து என்கிற குற்றசாட்டு சினிமா வட்டாரத்தில் பரவியது.

இந்நிலையில் தற்பொழுது நயன்தாரா மார்க்கெட் மிக பெரிய சரிவை சந்தித்து ,இனி நயந்தாரா நடித்தாலும், அந்த படத்திற்கு வரவேற்பு இல்லாத சூழல் தற்பொழுது உள்ளது, இதனால் நயன்தாரா கால் சீட் கொடுத்து நடித்தாலும், அந்த படம் தோல்வியை கொடுத்து தமக்கு மிக பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்த தயாரிப்பாளர்கள் ஏற்கனவே நயன்தாராவிடம் கால் சீட் கேட்டு கொடுத்த அட்வான்ஸ் தொகையை திருப்பி வாங்கி வருகிறார்கள்.

இந்நிலையில் நயன்தாரா கால் சீட் கொடுக்கிறேன் என்று சொன்னால் கூட, இனிமே நீ வயசுக்கு வந்தால் என்ன.? வரவில்லை என்றால் என்ன.? என்கிற கவுண்டமணி காமெடி காட்சியில் வருவது போன்று மார்க்கெட் இல்லாத நீ கால் சீட் கொடுத்தால் என்ன.? கொடுக்க வில்லை என்றால் என்ன.? என்று நயன்தாராவை ஒப்பந்தம் செய்த தயாரிப்பாளர்கள் கொடுத்த அட்வான்ஸ் தொகையை திருப்பி வாங்கி விட்டு சென்று வருவது நயன்தாராவுக்கு சினிமா வட்டாரத்தில் மிக பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

அதே நேரத்தில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நயன்தாராவுக்கு பதில் இனி தனக்கு தான் வாய்ப்பு வரும் என்று நம்பிக்கொண்டிருந்த திரிஷா கனவில் மண்ணை அள்ளி போடும் வகையில், தற்பொழுது புதியதாக கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நயன்தாராவுக்கு பதில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தமாகி வருகிறார். மேலும் நயன்தாரவை சந்தேமே இல்லாமல் சினிமாவில் இருந்து காலி செய்வதற்காக பெரும்பாலான தயாரிப்பாளர்கள் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு முக்கிய துவம் கொடுத்து வருகிறார்கள்.

நயன்தாராவுக்கு எதிராக உள்ள சுழலலை தனக்கு சாதகமாக மாற்றி கொண்டு தனது சம்பளத்தை பல மடங்கு அதிகரித்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ், இருந்தும் எந்த ஒரு இயக்குனரும் திரிஷாவை கண்டு கொள்ளவில்லை. இதனால் நயன்தாரா இடத்தை தக்க வைத்துக் கொள்ளலாம் என்று கனவில் மிதந்து திரிஷாவுக்கு ஏமாற்றமே மிஞ்சி உள்ளது. மேலும் விரைவில் திரைக்கு வர இருக்கும் பொன்னியின் செல்வன் மற்றும் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் புதிய படத்தின் வரவேற்பு எப்படி என்பதை பொறுத்துதான் திரிஷாவின் சினிமா எதிர்காலம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.