தவறான பாதையை தேர்தெடுத்து சினிமா வாழ்க்கையை இழந்த ஸ்ரீ திவ்யா.. என்ன நிலையில் உள்ளார் தெரியுமா.?

0
Follow on Google News

ஆந்திராவை பூர்விகமாக கொண்டவர் நடிகை ஸ்ரீ திவ்யா, தெலுங்கு சினிமாவில் குழந்தை நட்சதிரமாக பல படங்களில் நடித்து தெலுங்கு சினிமாவில் குழந்தை நட்சதிரமாக புகழ் பெற்றவர். தெலுங்கு சினிமாவில் சிம்ரன், சினேகா ஆகியோர் கதாநாயகியாக நடித்த தெலுங்கு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் ஸ்ரீ திவ்யா, அதே போன்று அர்ஜுன் , மகேஷ் பாபு ஆகியோர் நடித்த தெலுங்கு படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் ஸ்ரீ திவ்யா.

தமிழில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ஜோடியாக கதாநாயகியாக அறிமுகமானார், இவர் தமிழுக்கு வருவதற்கு முன்பே தெலுங்கில் இரண்டு படங்களில் கதாநாயகியாக நடித்தார். ஆனால் தெலுங்கு சினிமாவில் இவருக்கு கதாநாயகியாக வரவேற்பு இல்லை. இருந்தும் தமிழில் ஸ்ரீ திவ்யா நடித்த முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. ஐயா படத்தில் நயன்தாரா அறிமுகமான போது கிடைத்த அதே எதிர்பார்ப்பு ஸ்ரீ திவ்யா மீதும் தமிழ் சினிமாவில் இருந்தது.

ஸ்ரீ திவ்யா நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் , மருது ஆகிய முதல் இரண்டுமே கிராமத்து கதை அம்சம் கொண்ட படம் என்பது குறிப்பிடதக்கது. அடுத்தடுத்து ஸ்ரீ திவ்யா நடித்த படங்கள் தொடர் தோல்வியை சந்தித்து கடந்த ஐந்து வருடங்களாக தமிழில் பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வந்த ஸ்ரீதிவ்யா அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பட வாய்ப்புகள் தேடி வந்தார்.

ஆனால் அவருடைய கவர்ச்சி படங்களை பார்க்கும் ரசிகர்கள் இதெல்லாம் தேவையில்லாதது, எங்களுக்கு குடும்ப பாங்கான ஸ்ரீதிவ்யாவை தான் பிடிக்கும் என்று கருத்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் இமான் அண்ணாச்சி கடந்த வருடம் புதிய பங்களாவுக்கு புதுமனை புகு விழா நிகழ்ச்சி நடத்தினார், இதில் திரைப்பட நடிகர் நடிகைகள் பலர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் மது விருந்தும் நடந்துள்ளதாகவும், அதில் கலந்து கொண்ட நடிகர் மற்றும் நடிகைகள் பலர் மது அருந்தியுள்ளனர், நடிகை ஸ்ரீதிவ்யா மது அருந்தி போதையில் எல்லை மீறி நடந்து கொண்டதாக அப்போது சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டது. மேலும் சினிமா துறையை சேர்ந்தவர்களுடன் மது விருந்தில் கலந்து கொண்டு படவாய்ப்புகள் தேடி வந்துள்ளார். ஸ்ரீ திவ்யாவின் இந்த நடவடிக்கை அவருக்கு சினிமா துறையில் மிக பெரிய அவப்பெயரை ஏற்படுத்தி தந்தது.

இந்நிலையில் இதுவரை பட வாய்ப்புகள் தேடியது போதும் என்கிற முடிவுக்கு வந்த ஸ்ரீ திவ்யா தற்பொழுது கிராமத்தில் செட்டிலாகியுள்ள புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார், அதில் சுடிதார் போட்டு ஹொம்லி பெண்ணாக காட்சியளிக்கிறார், இந்த புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள் இப்படி ஹோம்லி பெண் ஸ்ரீ திவ்யா தான் எங்களுக்கு பிடிக்கும் என கருத்துக்களை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.