பாலா இயக்கும் வணங்கான் படத்தில் நடித்ததற்கு சம்பளம் கேட்ட துணை நடிகை மீது தாக்குதல்…

0
Follow on Google News

இயக்குனர் பாலா இயக்கத்தில் கடைசியாக வெளியான படங்கள் தொடர் தோல்வியை சந்தித்து, மேலும் அவருடைய குடும்பத்திலும் பிரச்சினையின் காரணமாக அவருடைய மனைவியை சட்டப்படி விவாகரத்து பெற்று பிரிந்தார். இப்படி சினிமா மற்றும் குடும்ப வாழ்க்கை இரண்டிலும் தோல்வியை தழுவி மிகப்பெரிய விருக்தியில் இருந்த பாலா தன்னுடைய முழு கவனத்தையும் சினிமாவில் செலுத்த தொடங்கியவர், நடிகர் சூர்யாவை வைத்து வணங்கான் படத்தை தொடங்கினார்.

படத்தின் கதை மீனவர்கள் தொடர்பானது என்பதால், கன்னியாகுமரியில் முதல் கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த படம் தொடங்கியது முதல் பாலா – சூர்யா இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு, ஒரு கட்டத்தில் உச்சக்கட்டம் அடைந்ததை தொடர்ந்து. முதல் கட்ட படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருக்கிய நிலையில், படத்தின் படப்பிடிப்பில் இருந்து பாதியிலே வெளியேறி சென்னை திரும்பினார் சூர்யா.

இதன் பின்பு சூர்யா – பாலா இருவருக்கு ஏற்பட்ட பிரச்சனையை சரி செய்ய தொடர்ந்து பேச்சு வார்த்தை நடைபெற்று வந்தது. இருந்தும் பாலா பிடிவாதம் பிடிக்க, படத்தின் தயாரிப்பாளர் என்கிற முறையில் ஒரு கட்டத்தில் இறங்கி வந்தார் சூர்யா. இதனை தொடர்ந்து சூர்யா – பாலா இருவருக்கும் இடையில் சுமூக முடிவு எட்டப்பட்ட நிலையில் மீண்டும் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் அதற்கான வாய்ப்புகள் இல்லாமல் போனது.

வணங்கான் படத்தின் படப்பிடிப்பு கைவிடப்படுகிறது என இயக்குனர் பாலா மற்றும் சூர்யா இருவரும் அறிவித்தனர். இதனை தொடர்ந்து, அதே கதையில் வேறு ஒரு நடிகரை நடிக்க வைத்து தன்னுடைய சொந்த தயாரிப்பில் மிகக் குறைந்த பட்ஜெட்டில் வணங்கான் படத்தை தயாரிக்க முடிவு செய்து, நடிகர் அருண் விஜய் நடிப்பில், ஏற்கனவே சூர்யாவை வைத்து கன்னியாகுமரியில் படப்பிடிப்பு நடத்திய அதே இடத்தில் வணங்கான் படத்தின் படப்பிடிப்பை நடத்தி வருகிறார் பாலா.

இந்நிலையில் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் கன்னியாகுமரியில் நடைபெற்று வரும் வணங்கான் திரைப்படதின் துணை நடிகை மீது தாக்குதல் நடத்தியதாக ஒருங்கிணைப்பாளர் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. வணங்கான் படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரி சுற்று வட்டார பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதில் கேரளாவை சேர்ந்த துணை நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர்.

ஒருங்கிணைப்பாளர் ஜிதின் என்பவர் துணை நடிகர் நடிகைகளை அழைத்து வந்து நடிக்க வைத்து வருகிறார். இந்த நிலையில், 3 நாட்கள் படபிடிப்பு முடிந்த நிலையில், துணை நடிகர் மற்றும் நடிகைகளுக்கு கூறப்பட்ட சம்பளம் கொடுக்கபடாததால் துணை நடிகை லிண்டா என்பவர், ஒருங்கிணைப்பாளர் ஜிதினிடம் கேட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த ஜிதின் லிண்டாவை கடுமையாக தாக்கியதாக காயமடைந்த லிண்டா காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

follow on google news https://news.google.com/publications/CAAqBwgKMMfWoAsw3-C4Aw?ceid=IN:ta&oc=3