அட நம்பவே முடியல இளையராஜாவா இது… வெற்றிமாறனிடம் இளையராஜா நடந்து கொண்ட விதம்…

0
Follow on Google News

தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கியவர் இசைஞானி இளையராஜா, தமிழ் சினிமாவில் டைட்டில் கார்டில் இசை, இசைஞானி இளையராஜா என பெயர் இடம்பெற்று இருந்தாலே, அந்த படத்திற்கு ரசிகர் கூட்டம் அலைமோதியது ஒரு காலம். இளையராஜாவிடம் கதை சொல்லிவிட்டு முதலில் அவரிடம் கால் சீட் வாங்கிட்டு வாங்க, இதன் பின்பு அடுத்தகட்ட வேலைகளை பார்பபோம் என தயாரிப்பாளர்கள் இயக்குனர்களை அனுப்பிய காலம் உண்டு.

இந்நிலையில் எதிர்பாராத உச்சத்தில் அமர்ந்த இளையராஜா ஒரு கட்டத்தில் தான் போடுவது தான் அந்த படத்தின் பாடலுக்கு மெட்டு, தான் போடுவது தான் அந்த படத்தின் பின்னணி இசை என இயக்குனர்களிடம் தன்னுடைய திமிரை காட்ட தொடங்கியுள்ளார், இசையில் திருத்தம் செய்ய இயக்குனர் கோரிக்கை வைத்தால், உடனே இளையராஜாவுக்கு கோவம் வந்து விடும் என கூறப்படும் நிலையில், இதற்கு காரணம் அப்போது தமிழ் சினிமாவில் இளையராஜாவை மிஞ்ச ஆளே இல்லை என்கிற நிலை தமிழ் சினிமாவில் இருந்தது தான்.

இந்நிலையில் இளையராஜாவின் திமிர் காரணமாக அப்போது அவரிடம் ஏற்பட்ட மோதல் காரணமாக மிக பெரிய இயக்குனர்களான கே.பாலச்சந்தர், மற்றும் மணிரத்தினம் ஆகியோர் இளையராஜா உடன் இருந்த நட்பை முறித்து கொண்டனர் அந்த வரிசையில் இயக்குனர் பாரதிராஜாவும் இடம் பெற்றார், இந்நிலையில் இளையராஜாவின் ஆணவத்தை அடக்கியே தீர வேண்டும் என முடிவு செய்த கே.பாலசந்தர் தன்னுடைய சொந்த தயாரிப்பில் மணிரத்தினம் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமானை இசை அமைப்பாளராக ரோஜா படத்தில் அறிமுகம் செய்து வைத்தனர்.

இப்படி இளையராஜாவை தமிழ் சினிமா கொண்டாடினாலும் கூட, அவர் ஆணவம் பிடித்தவர் என்கிற விமர்சனமும் உண்டு, இந்நிலையில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகும் விடுதலை படத்திற்கு இளையராஜா இசை அமித்துள்ளார், அதில் பல முறை இசையில் மாற்றம் செய்ய வெற்றிமாறன் வலியுறுத்தியும், பொறுமையாக வெற்றிமாறன் விருப்பத்திற்கு ஏற்ப இசை அமைத்து கொடுத்துள்ளார் இளையராஜா.

இது தான் இளையராஜா சினிமாவில் முதல் தடவை என தெரிவிக்கும் சினிமா துறையினர், அட நம்ம இளையராஜாவா இப்படி, மாறி விட்டாரே என ஆச்சர்யத்துடன் தற்பொழுது இளையராஜாவை பார்த்து வருகிறது தமிழ் திரையுலகம்.