விஜய் வைத்த டிமாண்ட்… புறக்கணித்து விஜய்யை வெளியேற்றிய விக்ரமன்.. என்ன டிமாண்ட் தெரியுமா.?

0
Follow on Google News

இயக்குனர் SA சந்திரசேகர் மகன் என்கிற பின்புலத்தில் சினிமாவில் அறிமுகமாகி தன்னை அடையாளம் காட்டி கொண்டவர் நடிகர் விஜய்.தனது தந்தை இயக்கத்தில் சுமார் ஆறு படங்கள் வரை குழந்தை நட்சத்திரமாக நடித்த விஜய் நடித்த கதாபாத்திரம் ஏதும் மக்கள் மனதில் ஆழமாக பதியவில்லை. தந்தை பின்புலம் இருந்தாலும் குழந்தை நட்சத்திரமாக நடிப்பில் அசத்தியிருப்பார் சிலம்பரசன், ஆனால் சிம்பு போன்று விஜய் ஜொலிக்கவில்லை.

விஜய் தனது 18 வயதில் தந்தையிடம் சினிமாவில் நடிக்க தனது விருப்பத்தை தந்தையிடம் தெரிவித்துள்ளார் விஜய், இதனை தொடர்ந்து நாளைய தீர்ப்பு படத்தில் ஹீரோவாக அறிமுகம் செய்து வைத்தார் SA சந்திரசேகர், ஆனால் விஜய்க்கு ஆரம்ப கட்டத்தில் எதிர்பார்த்த வரவேற்பு சினிமாவில் இல்லை. இதனை தொடர்ந்து விஜய் என்கிற ஒரு நடிகரை மக்கள் மத்தியில் அறிமுகமம் செய்து வைக்க நடிகர் விஜயகாந்த் உடன் இணைந்து நடிக்க வைத்தார் SA சந்திரசேகர்,

அந்த முயற்சி செந்தூரப்பாண்டி படத்தின் மூலம் விஜய் என்கிற நடிகர் மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட வைத்தது. இருந்தும் முன்னனி இயக்குனர்கள் யாரும் விஜயை வைத்து படம் இயக்க முன் வராததால், தொடர்ந்து விஜயை ஹீரோவாக வைத்து பல படங்கள் இயக்கினார் அவருடைய தந்தை SA சந்திர சேகர். ஒரு சில படங்கள் வெற்றி பெற்றாலும், விஜய்க்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை,

இந்நிலையில் இயக்குனர் விக்ரமன் இயக்கத்தில் வெளியான பூவே உனக்காக படத்தில் நடிகர் விஜய் நடித்த பின்பு தான் சினிமாவில் அவருக்கென ஒரு அங்கீகாரம் கிடைத்தது, இதன் பின்பு அடுத்தடுத்து மற்ற இயக்குனர்கள் படத்தில் நடிக்கும் வாய்ப்புகள் விஜய்க்கு கிடைத்தது. விஜய் ஒரு ஹீரோவாக அவருடைய தந்தை அறிமுகம் செய்து வைத்திருந்தாலும் அவரை நடிகராக அடையாளம் காட்டியவர் இயக்குனர் விக்ரமன்.

இதன் பின்பு அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து முன்னனி நடிகராக விஜய் வந்த பின்பு, மீண்டும் விஜய்யை வைத்து படம் இயக்க விரும்பிய விக்ரமன் உன்னைத் நினைத்து படத்தில் முதலில் விஜய்யை நடிக்க முடிவு செய்து படப்பிடிப்பு தொடங்கியுள்ளது, ஆனால் படத்தின் கதையில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும் என இயக்குனர் விக்ரமனுக்கு டிமாண்ட் வைத்துள்ளார் விஜய்.

ஆனால் விக்ரமன் கதையில் மாற்றம் செய்ய முடியாது என உறுதியாக இருந்ததை தொடர்ந்து, விஜய் மீண்டும் மீண்டும் கதையில் மாற்றம் செய்ய வேண்டும் என தன்னுடைய டிமாண்ட்டை வைத்துள்ளார். ஒரு கட்டத்தில் உன்னை நினைத்து படத்தில் இருந்து விஜய்யை வெளியேற்றிவிட்டு நடிகர் சூர்யாவை ஹீரோவாக வைத்து அந்த படத்தை எடுத்து முடித்தார் விக்ரமன். இந்த படம் மிக பெரிய ஹிட் கொடுத்தது குறிப்பிடதக்கது.