லியோ படத்தில் இதுவரை அர்ஜுன் நடிக்கும் காட்சிகள் ஏன் படமாக்கபடவில்லை தெரியுமா.?

0
Follow on Google News

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் லியோ படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக சென்னையிலிருந்து சென்றுள்ள சுமார் 500க்கும் மேற்பட்ட குழுவினருடன் லோகேஷ் கனகராஜ் காஷ்மீரில் படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளார். காஷ்மீரில் மைனஸ் 12 டிகிரி செல்சியஸ் கடும் குளிரில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது.

காஷ்மீரில் நடந்த படப்பிடிப்பில் நடிகர் மிஷ்கின் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது, அடுத்தடுத்த கௌதம் மேனன் நடிக்கும் காட்சிகள் மற்றும் ஹிந்தி நடிகர் சஞ்சய் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஏழு வில்லன்கள் என ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது. அதில் ஒரு வில்லனாக கமிட்டாகியுள்ள நடிகர் அர்ஜுன் நடிக்கும் காட்சிகள் காஷ்மீரில் படமாக்க படும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

மேலும் காஷ்மீரில் இருந்து எந்த நேரமும் இயக்குனர் லோகேஷ் கனகராஜிடன் இருந்து நடிகர் அர்ஜுனுக்கு அழைப்பு வரும் என்றும், உடனே அர்ஜுன் காஷ்மீர் சென்று படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்கு தயாராக இருக்கிறார் என செய்திகள் வெளியானது, ஆனால் காஷ்மீரில் அர்ஜுன் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படாமலே, காஷ்மீரில் படப்பிடிப்பபை முடித்து விட்டு சென்னை திரும்பியுள்ளது லியோ படக்குழு.

தற்பொழுது பிரசாத் ஸ்டுடியோவில் விஜய் வீடு போன்று செட் அமைத்து அங்கே படமாக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து அடுத்து ஹைராபாத்தில் லியோ படத்தின் படப்பிடிப்பு நடைபெறுவதற்கான செட் அமைக்கும் பனி தீவிரமாக நடைபெற்று வருகிறது, இந்நிலையில் அணைத்து வில்லன்கள் நடிக்கும் காட்சிகள் படமாக்கபட்டு விட்ட நிலையில் இதுவரை அர்ஜுன் நடிக்கும் காட்சி மட்டும் படமாக்கப்படவில்லை.

இது குறித்து சினிமா வட்டாரத்தில் விசாரித்ததில், ஹைராபத்தில் நடக்க இருக்கும் படப்பிடிப்பில் தான் அர்ஜுன் நடிக்கும் காட்சிகள் படமாக்க பட இருப்பதாககூறப்படுகிறது.