10க்கு மேற்பட்ட பெண்களுடன் உறவு வைத்துள்ளேன்.. ரஜினி பட வில்லன் சர்ச்சை பேச்சால்.. சிக்கலில் ஜெயிலர்..

0
Follow on Google News

நடிகர் விஷால் நடித்த திமிரு, தனுஷ் நடித்த மரியான், சிலம்பரசன் நடிப்பில் வெளியான சிலம்பாட்டம் போன்ற படங்களில் வில்லன் நடிகராக நடித்தவர் மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் விநாயகன். இவர் மலையாள சினிமாவில் வில்லன் நடிகராக பிஸியாக வலம் வந்தவர். இந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு மாடலிங் துறையை சார்ந்த மிருதுளா தேவி என்பவர் இவர் மீது பரபரப்பு பாலியல் புகார் தெரிவித்திருந்தார்.

நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள விநாயகனை அழைத்தபோது, தன்னையும் தன்னுடைய தாயாரையும் அவருடைய விருப்பப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று ஆபாசமாக பேசியதாக விநாயகன் மீது கேரளாவில் உள்ள காவல் நிலையத்தில் புகார் தெரிவித்து இருந்தார் மாடலிங் துறையை சேர்ந்த மிருதுளா தேவி. இதனை தொடர்ந்து மலையாள சினிமா வில்லன் நடிகர் விநாயகன் மீது வழக்கு பதிவு செய்து கேரளா போலீசார் கைது செய்தனர்.

பின்பு நீதிமன்றம் மூலம் ஜாமினின் வெளிவந்த விநாயகன் மீது குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில்,மாடலிங் மிருதுளா தேவி தன் மீது தெரிவித்த பாலியல் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார் வில்லன் நடிகர் விநாயகன். இது கேரள சினிமாவில் மிக பெரிய அவப்பெயரை விநாயகனுக்கு பெற்று தந்தது. பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய விநாயகன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.

அப்போது நான் திருமணத்திற்கு முன்பு 10 பெண்களுடன் உறவு வைத்துள்ளேன், அவர்களின் அனுமதி பெற்று தான் உறவு வைத்தேன் என்று தெரிவித்த விநாயகன். அங்கிருந்த பெண் பத்திரிகையாளர் ஒருவரை கைநீட்டி இந்த பெண்ணுடன் நான் பாலியல் உறவு வைத்துக் கொள்ள விரும்பினால், நேரடியாக இந்த பெண்ணிடம் கேட்பேன், ஆனால் இவர் முடியாது என்று சொல்வார்.

ஆனால் என்னுடன் பழகிய பெண்களை, நான் பாலியல் உறவுகளுக்கு அழைத்த போது, அவர்கள் யாரும் மறுப்பு சொல்லவில்லை என்று வில்லன் நடிகர் விநாயகன் பேசியது ஒட்டுமொத்த மலையாள சினிமா துறையினர் மத்தியில் கடுமையான கண்டனங்கள் எழுந்தன. இந்த நிலையில் மலையாளத் திரை உலகை பூர்வீகமாக கொண்ட இவர் தற்போது தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து ஜெயிலர் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் இவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்து பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது தன்னுடைய மனைவி பப்பித்தவை விவாகரத்து செய்து விட்டதாக தனது சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளார். இதோடு தங்களுக்கிடையேயான திருமண பந்தம் முடிவுக்கு வந்ததாக தெரிவித்துள்ளார். இந்நிலையில பாலியல் புகாரில் சிக்கியுள்ள விநாயகனுக்கு எதிராக கேரள மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு குரல் எழுந்துள்ளது.

பாலியல் குற்றவாளியான விநாயகன், தான் மாடலிங் துறையை சேர்ந்த ஒரு பெண் தெரிவித்த பாலியல் குற்றத்தை ஒப்பு கொண்டு, மேலும் தான் 10க்கு மேற்பட்ட பெண்களுடன் உறவு வைத்துளேன் என பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசி பெரும் சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகருக்கு ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்துள்ளது அந்த படத்திற்கு மிக பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.மேலும் பாலியல் புகாரில் சிக்கிய விநாயகன் நடிக்கும் படத்தை புறக்கணிக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருவது ஜெயிலர் படத்திற்கு மிக பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.