பச்சை கொடி காட்டிய கங்கனா ரனவ்த் … சோகத்தில் ரஜினிகாந்த் … மகிழ்ச்சியில் பி.வாசு..

0
Follow on Google News

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த படம் சந்திரமுகி, தொடர்ந்து மெகா ஹிட் படங்களை கொடுத்து வந்த ரஜினிகாந்த் பாபா படத்தின் தோல்வியினால் மிகப் பெரிய சரிவை சினிமாவில் சந்தித்தபோது அவருக்கு மீண்டும் சினிமாவில் கை கொடுத்து தூக்கிய படம் சந்திரமுகி. இந்த படத்தின் இயக்குனர் பி வாசு சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தை தற்பொழுது தொடங்கி உள்ளார்.

ரஜினியிடம் கால் சீட் கிடைக்காததால் ராகவ லாரன்ஸ் நடிப்பில் இந்த படத்தை பி.வாசு இயக்கி வருகிறார். இதில் சந்திரமுகி கதாபாத்திரத்தில் ஹிந்தி நடிகை கங்கனா ரனாவத் நடிக்கிறார். கங்கனா நடிப்பில் கடைசியாக தமிழில் வெளியான தலைவி படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதில் ஜெயலலிதாவாக ஏற்று கங்கனா நடித்தது குறிப்பாக பெண்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்றது.

பாலிவுட் நடிகை கங்கனா ரனவ்த் மீது பல்வேறு சர்ச்சை கருத்துக்கள் அரசியல் ரீதியாக உண்டு. இருந்தாலும் தொடர்ந்து சினிமாவில் அவருக்கான மார்க்கெட் எந்த விதத்திலும் குறையவில்லை, இந்திய அளவில் உச்சத்தில் இருந்து வரும் கங்கனா ரனவ்தை சந்தித்து வேறு ஒரு இந்தி படத்தின் கதையை பி. வாசு ஆரம்பத்தில் தெரிவித்துள்ளார்.

ஆனால், அந்தக் கதையில் திருப்தி அடையாத கங்கனா ரனவ்த், தற்போது நீங்க வேறு என்ன படம் பண்ணிக் கொண்டிருக்கிறீர்கள் என்று கங்கனா ரனவ்த் கேட்க, அதற்கு சந்திரமுகி 2 படத்தை எடுப்பதற்கான முயற்சியில் இறங்கி கொண்டிருக்கிறேன், என பி.வாசு தெரிவித்துள்ளார். சந்திரமுகி 2 கதையை கேட்ட கங்கனா ரனவ்த். இந்தப் படத்தில் சந்திரமுகியாக நானே நடிக்கிறேன் என்று வற்புறுத்தி இந்த படத்தில் இடம்பெற்றார்.

சந்திரமுகி 2 படத்திற்காக மொத்தம் 30 நாள் கால் சீட் கொடுத்துள்ள கங்கனா சுமார் ஒன்பது கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. சந்திரமுகி 2 படத்தில் கங்கனா ரனவ்த் நடிக்கும் ஒவ்வொரு காட்சியையும் அதிகமாக ரிகர்சல் எடுத்த பின்பே நடித்து வருகிறார். இந்நிலையில் பாலிவுட்டில் மிகப்பெரிய உச்சத்தில் இருக்கும் கங்கனா ரனவ்த் தொழில் மீது உள்ள அக்கறையை பார்த்து அங்கே படப்பிடிப்பில் இருக்கும் தமிழ் திரையுலகையைச் சேர்ந்தவர்கள் வியப்பில் உள்ளார்கள்.

பொதுவாக தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் மட்டும் நடித்துவிட்டு நான் ரிகர்சல் செய்ய மாட்டேன், படப்பிடிப்புக்கு தாமதமாக வருவது என்று பந்தா செய்யும் தமிழ் நடிகைகளுக்கு கங்கனா ரனவ்த் அந்த தொழில் பற்று தரமான சம்பவமாக அமைந்துள்ளது என்கின்றனர் கங்கனா ரனவ்த் நடவடிக்கைகளை பார்த்த தமிழ் திரையுலகத்தை சேர்ந்தவர்கள்.

இதனை தொடர்ந்து சந்திரமுகி 2 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக சென்று முடியும் தருவாயில் உள்ளது, அதில் வேட்டையன் கதாபாத்திரம் மற்றும் சந்திரமுகி கதாபாத்திரம் சந்திரமுகி முதல் பாகத்தை விட சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளது பற்றி கேள்விப்பட்ட ரஜினிகாந்த், இந்த படத்தை மிஸ் செய்து விட்டோம் என்ற மிகப்பெரிய வருத்தத்தில் தற்போது இருந்து வருவதாக கூறப்படுகிறது.

அதே நேரத்தில் சந்திரமுகி 2 படத்தில் இயக்குனர் பி.வாசு உடன் பணியாற்றிய ஹிந்தி நடிகை கங்கனா ரனவ்த் இயக்குனரின் அப்ரோச் மிகவும் பிடித்து போக, ஆரம்பத்தில் கங்கனா ரனவ்த்தை சந்தித்து சொன்ன ஹிந்தி படத்தில் நடிக்க பச்சை கொடி காட்டியுள்ளார், இதனை தொடர்ந்து சந்திரமுகி 2 படத்தை முடித்துவிட்டு கங்கனா ரனவ்த் நடிப்பில் ஹிந்தி படம் ஒன்றை இயக்கும் மகிழ்ச்சியில் இருக்கிறார் பி. வாசு.